For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விழுப்புரத்தில் பெண் குளிக்கையில் வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த வாலிபர்

By Siva
Google Oneindia Tamil News

விழுப்புரம்: விழுப்புரத்தில் அடுத்தவர் மனைவி குளிக்கும்போது அவரை செல்போனில் படம் எடுத்து மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரத்தில் உள்ள வாணியர் தெருவில் வசித்து வருபவர் கமலா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் தனது வீட்டில் குளித்துக் கொண்டிருக்கையில் அதே பகுதியைச் சேர்ந்த வினோத்(28) என்பவர் கமலாவை தனது செல்போனில் வீடியோ எடுத்தார். அதன் பிறகு அந்த வீடியோவை காட்டி மிரட்டி கமலாவிடம் பணம் பறித்துள்ளார்.

பணம் கொடுக்காவிட்டால் வீடியோவை இணையதளத்தில் போட்டுவிடுவேன் என்று கூறி ரூ.3 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளார் வினோத். இந்நிலையில் அவர் கமலாவிடம் மேலும் ரூ. 50 ஆயிரம் பணம் கேட்டுள்ளார்.

இதையடுத்து கமலா நடந்த சம்பவம் பற்றி தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து நேற்று விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் வினோதை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Villupuram police arrested a youth for takiing video of his neighbour while she was taking bath and got money from her after threatening to leak the video in the internet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X