சாத்தூர் பேருந்தில் இளைஞர் சுட்டுக்கொலை: இரண்டு பெண்களுக்கு 15 நாள் போலீஸ் காவல்
விருதுநகர்: சாத்தூர் அருகே அரசு பேருந்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு சாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 12ம் தேதி நாகர்கோவில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து சாத்தூரில் நின்ற போது, அந்த பேருந்தில் பயணம் செய்த கோவில்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பாக 9 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த 13ம் தேதியன்று மதுரை 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், முகமது ரஃபீக் என்பவர் சரணடைந்தார். சாத்தூர் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அதன்படி, ரபீக் கொடுத்த தகவலின்படி இன்று காலை சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியில் பழைய கிணற்றில் தூக்கி வீசப்பட்ட, கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும் கொலையாளி அணிந்திருந்த உடையையும் இருக்கன்குடி என்ற இடத்தில் போலீசார் கண்டெடுத்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் கைதான 2 பெண்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. மகாலட்சுமி, லதாவை சிறையில் அடைக்க சாத்தூர் 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications