For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு.. சென்னையில் இளைஞர்கள் திடீர் போராட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி 20 நாட்களாக தமிழக விவசாயிகள் அய்யாகண்ணு தலைமையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னை கொருக்குபேட்டையில் இளைஞர்கள் திடீர் போராட்டம் நடத்த முயன்றனர்.

Youth stage protest in Chennai and Nellai

போராட்டம் நடத்த ஒன்று திரண்ட சுமார் 50 பேரை கலந்து செல்ல போலீசார் அறிவுறத்தினார்கள். ஆனால் இளைஞர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கொருக்குபேட்டையில் பதற்றம் ஏற்பட்டது.

இதே போன்று, நெல்லையில் ரயில் நிலையம் முன்பு திடீரென இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். ரயில் நிலையம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
Youth staged a protest at korukkupetai in Chennai and Thirunelveli to extend their support to protesting farmers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X