வட மாநிலத்தவருக்கு வேலையா? கொதித்தெழுந்த கட்டிட தொழிலாளர்கள்.. அதிராம்பட்டினத்தில் வெடித்த போராட்டம்
அதிராம்பட்டினத்தில் வட மாநில தொழிலாளர்களுக்கு எதிராக உள்ளூர் கட்டுமான தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
தஞ்சாவூர்: கட்டிட பணியில் குறைந்த சம்பளம் பெற்று அதிக நேரம் வேலை செய்வதால் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு பணி வழங்கிவிட்டு தங்களை கட்டுமான நிறுவனங்கள் ஒதுக்குவதாக கூறி தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ளூர் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த சுமார் 10 ஆண்டுகளாக வட இந்தியர்களின் வருகை அதிகரித்து இருக்கிறது. கட்டுமானத் தொழில், உணவகங்கள், சலூன் கடைகள், நெசவு தொழில் தொடங்கி விவசாயம் வரை பல்வேறு தொழில்களில் வட இந்தியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
பீகார், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், வட கிழக்கு மாநிலங்கள் என சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பெருநகரங்கள் தொடங்கி சிறு நகரங்கள், கிராமங்கள் வரை வட இந்தியர் எண்ணிக்கை பெருகிவிட்டது.

வட மாநிலத்தவர்கள் வருகை
தங்கள் மாநிலங்களை விட தமிழ்நாட்டில் நல்ல ஊதியம் வழங்கப்படுவதாக கூறி இங்கு வேலைக்கு வருகிறார்கள் வட இந்திய தொழிலாளர்கள். இவர்களின் வருகையால் தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வருகிறது.

கட்டுமான தொழில்
தமிழர்களை விட வட இந்திய தொழிலாளர்கள் குறைவான ஊதியம் பெற்று அதிக நேரம் வேலை செய்வதால் அவர்களை முதலாளிகள் பணியமர்த்துகின்றனர். கொத்தனார், சித்தாள், மம்பட்டியாள், பெயிண்டர், ஆசாரி என கட்டிடம் சார்ந்த அனைத்து பணிகளுக்கும் வட மாநிலத்தவர்களையே கட்டுமான நிறுவனங்கள் ஈடுபடுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதிராம்பட்டினத்தில் சாலை மறியல்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான வட மாநிலத்தவர்கள் தங்கி இருந்து கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில்தான் வட மாநில தொழிலாளர்களை கட்டுமான வேலையில் ஈடுபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிராம்பட்டினத்தில் உள்ளூர் கட்டுமான தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்
கட்டுமான பணிகளில் வட மாநிலத்தவர்களை அதிகளவில் ஈடுபடுத்துவதால் தங்களுக்கு வேலை கிடைக்காமல் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி இன்று காலை அதிராம்பட்டினத்தின் முக்கிய பேருந்து நிறுத்தமான சேர்மன் வாடி அருகே பெண்கள் உட்படநூற்றுக்கணக்கான கட்டிட தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு
அப்போது வட மாநிலத் தொழிலாளர்களை கட்டுமான பணியில் ஈடுபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மறியலை கலைத்தனர். பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்லும் நேரத்தில் கட்டிட தொழிலாளர்கள் நடத்திய இந்த போராட்டம் காரணமாக போக்குவரத்து ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டது.

நாங்கள் எங்கே செல்வது
இதுகுறித்து பேசிய பெண் கட்டுமான தொழிலாளர், "இந்திகாரன் சித்தாளாக வந்தான். மம்பட்டியாளாக வந்தான். கொத்தனாராக வந்தான். அப்படியென்றால் நாங்கள் எங்கே செல்வது. நடுரோட்டில் சாவதா? பிள்ளைகள் இல்லாத நாங்கள் என்ன செய்வது? இந்த வேலையைதான் நம்பி இருக்கிறோம். இந்திகாரர்கள் தமிழ்நாட்டில் வந்து வேலை பார்த்தால் தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எங்கே செல்வது? எங்க பிள்ளைகள் பட்டினியாக கிடக்கின்றன. ஒரு கிலோ அரிசிக்கு வழியில்லாமல் கிடக்கிறோம்." என்றார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications