டிடிவி வேண்டாம்.. இரட்டை இலைதான் வேண்டும்.. கூட்டணிக்குள் குண்டு வைத்த போஸ்டர்கள்
தஞ்சாவூர்: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், திருவையாறு பகுதியில் இரட்டை இலை சின்னம் எங்கே?. இரட்டை இலை சின்னம் இல்லையென்றால் வாக்களிக்க மாட்டோம் என்று சுவர்களில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. திமுக மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி வருகிறது.

தேர்தல் பணி தீவிரம்
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு ஏறக்குறைய முடித்துவிட்டது. திமுக, அதிமுக, நாதக, தவெக உள்பட அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணிகளிள் மும்முரம் காட்டி வருகின்றனர். கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு விவகாரம், தேர்தல் பிரச்சாரம், தேர்தல் வாக்குறுதிகள் என அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது வெளியிட்டுள்ளார். மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க 25,000 ரூபாய் மானியம், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலை இல்லா ஃபிரிட்ஜ், ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ பருப்பு, எண்ணெய் இலவசம் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் 297 அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
போஸ்டரால் பரபரப்பு
இந்நிலையில், திருவையாறு பகுதியில் இரட்டை இலை சின்னம் எங்கே?. இரட்டை இலை சின்னம் இல்லையென்றால் வாக்களிக்க மாட்டோம் என்று சுவர்களில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் NDA கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அதிமுக தலைமை இரண்டு முறை நாடாளுமன்ற தேர்தலிலும் ஒருமுறை திருவையாறு தொகுதி கூட்டணி கட்சிகளுக்கே வழங்கியது. இந்த நிலையில், NDA கூட்டணியில் உள்ள அம்மா முன்னேற்றக் கழகத்திற்கு திருவையாறு தொகுதிக்கு அதிமுக சீட் ஒதுக்கியதாக கூறப்பட்டது.
இரட்டை இலை சின்னம் எங்கே..
இந்நிலையில், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, கண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூடும் பொது இடங்களில் சுவர்களில் இரட்டை இலை சின்னம் எங்கே என்றும், திருவையாறு தொகுதியில் கடந்த மூன்று தேர்தல்களில் இரட்டை இலை சின்னம் போட்டியிட முடியாமல் தடுக்கும் துரோகிகளே என்றும், இரட்டை இலை சின்னம் இல்லை என்றால் கூட்டணி கட்சிக்கு வாக்களிக்க மாட்டோம் என்றும் இப்படிக்கு அதிமுக உண்மை தொண்டன் என்று ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications