Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிரப்போகுது டெல்டா.. நாளை 8 மாவட்டங்களில் பந்த்! மத்திய அரசு அலுவலகங்களை மறிக்கும் விவசாயிகள்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து போராட்டத்தை நடத்தி வரும் பாஜக மற்றும் கன்னட அமைப்புகளை கண்டித்து நாளை டெல்டா மாவட்டங்களில் திமுக விவசாய அணி உட்பட பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணைய பரிந்துரையை ஏற்று காவிரியில் உரிய நேரத்தில் போதிய நீரை திறந்து விடாத காரணத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பல லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் கருகி உள்ளன. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் காவிரி மேலாண்மை ஆணைய பரிந்துரையின்படி 5,000 கன அடி நீர் திறக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா முழுவதும் போராட்டங்கள் வலுவடைந்து வருக்கின்றன. விவசாயிகள், கன்னட அமைப்புகள், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Banth and protest in front of the central government offices in the delta districts due to cauvery issue Tommorrow

இன்று கன்னட அமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் போராட்டம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், கடந்த 7 ஆம் தேதி தஞ்சாவூரில் திமுக விவசாய அணி மற்றும் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திமுக விவசாய அணி மாநிலச் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான ஏ.கே.எஸ்.விஜயன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திருவையாறு திமுக எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நா.பெரியசாமி, காவிரி டெல்டா விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் கே.வி.இளங்கீரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம், விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவர் தெய்வசிகாமணி உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Banth and protest in front of the central government offices in the delta districts due to cauvery issue Tommorrow

அந்த கூட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மீதம் உள்ள குறுவைப் பயிரை பாதுகாக்கவும், சம்பா சாகுபடியை தொடங்கிடவும், காவிரிக்கு மாதாமாதம் கொடுக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தரக்கோரி தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாளை போராட்டத்துக்கு திமுக விவசாய அணி உட்பட அனைத்து விவசாய சங்கங்களும் போராட்டத்தில் குதிக்க உள்ளனர். இதன் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+