3 நாளாச்சு.. குடிக்க தண்ணீர் இல்லை.. சாப்பாடும் இல்லை.. குமுறும் பேராவூரணி மக்கள்
தண்ணீர், சாப்பாடு இன்றி தவிப்பதாக பேராவூரணி மக்கள் தெரிவித்துள்ளனர்.
பேராவூரணி: புயல் பாதித்து 3 நாள் ஆகியும் எங்களுக்கு குடிக்க தண்ணீரும், சாப்பாடும் இல்லை என்று பேராவூரணி மக்கள் புலம்புகிறார்கள்.
கஜா புயல் தாக்கத்திற்கு தஞ்சையும் விதிவிலக்கல்ல. குறிப்பாக பேராவூரணி பகுதியானது கஜா புயலால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. தங்கள் பகுதிகளை அதிகாரிகள் யாருமே இதுவரை வந்து பார்வையிடவில்லை என்று அப்பகுதி மக்கள் குறைபட்டு சொல்கிறார்கள்.
3 நாளாக சாப்பாடு இல்லாமல் பசி பட்டினியால் குழந்தைகளுடன் தவித்து வருகிறோம் என்றும் மாவட்ட நிர்வாகத்தின் எந்த உதவியும் கிடைக்காமல் மின்சாரமும் இல்லாமல் கடும் அவஸ்தையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து பேராவூரணியின் தற்போதைய அவல நிலையினை ஒருசிலர் ட்விட்டர் பதிவில் வெளியிட்டு வருகின்றனர். அந்த பதிவுகள் அனைத்தும் மக்களை கலங்க செய்வதாக உள்ளது.
[நள்ளிரவு.. சுழற்றியடித்த கஜா.. மிரண்டு போன சிறுமி.. உயிரை பறித்த தென்னை மரம்.. ஒரு பரிதாப மரணம்!]
|
தண்ணீர் இல்லை
பேராவூரணியில் போர் தண்ணீருக்காக 2 கிலோமீட்டர் தூரத்துக்கு போகிறோம் என்றும், முன்னெல்லாம் மாட்டு வண்டியில் தண்ணீருக்கு அலைந்தோம்.... இப்போது ஸ்கூட்டியில் அலைகிறோம்... அவ்வளவுதானே தவிர பஞ்சம் இன்னும் தீரவில்லை என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
|
ஆடு மாடுகள் பலி
அதேபோல ஆடு, மாடுகளையும் கஜா விட்டு வைக்கவில்லை போல தெரிகிறது. மாடு ஒன்று உயிரிழந்துவிட, ஒத்தை ஆளே பள்ளம் தோண்டி அந்த மாட்டை புதைக்கும் அவலமும் வெளிப்பட்டு உள்ளது.
|
எங்களுக்கு உதவிக்கு ஆள் இல்லையே
உலகத்துக்கே சாப்பாடு போட்ட ஊரில் தண்ணிக்கும் சாப்பாட்டுக்கும் பஞ்சமாக உள்ளது... விழுந்து கிடக்கும் மரங்களை அகற்ற ஆள் இல்லை.. கரண்ட் இல்லை... பஞ்சாயத்து அமைப்புகளும் இல்லை என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.
|
யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை
பேராவூரணியை சுற்றியுள்ள பகுதியில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அரசின் அலட்சியப்போக்கால் இதுவரை எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டுள்ளது.
பேராவூரணி மக்களுக்கு உடனடி தேவை குடிநீரும்... சாப்பாடும்.. கரண்ட்டும் என்பதுதான் உடனடி தேவையாக உள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications