பெற்ற மகனை விற்ற பரிதாப தந்தை.. குவியும் உதவிகள்.. நீங்களும் உதவலாமே
மகனை 10 ஆயிரம் ரூபாய்க்காக அடகு வைத்துள்ளார் தந்தை
Recommended Video

தஞ்சை: தன் குடிசை வீட்டை சீரமைக்க முடியாமல் பெற்ற மகனை 10 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்த குடும்பத்துக்கு உதவிகள் புரிய நல்லுள்ளங்கள் விரைந்து வர ஆரம்பித்துள்ளன.
பட்டுக்கோட்டை அருகே அண்ணா குடியிருப்பு பகுதி வயல்வெளி நடுவில் குடிசை கட்டி வாழ்ந்து வந்தவர் மாரிமுத்து. இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு தமிழக அரசின் குடும்ப அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லாத காரணத்தினால், குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை எனகூறப்படுகிறது.

வெட்டவெளி வாழ்க்கை
புயல் அடித்தபோது மாரிமுத்து குடிசை காற்றில் பறந்தது. இதற்கான உரிய நிவாரணமும் மாரிமுத்துவுக்கு கிடைக்கவில்லை. இதனால் மழை, வெயில் என்று வெட்டவெளியில் குடும்பத்தை புயல் அடித்து இவ்வளவு நாள் வரை நகர்த்தி வந்தார்.

அடகு வைக்க முடிவு
எவ்வளவோ முயற்சி செய்தும் குடிசையை சீரமைக்க முடியவில்லை. புதுகுடிசை கட்டவும் கையில் பணம் இல்லை. அப்படியே கட்டினாலும் குறைந்தது 10 ஆயிரம் ரூபாயாவது தேவைப்படும்என்று சொல்லி விட்டார்கள்.இதனால் அடகு வைக்கவும் தன்னிடம் பொருள், உடமை எதுவுமே இல்லை என்பதால், 2-வது மகனை அடகுவைக்கும் முடிவுக்கு வந்தார்.

பண்ணை வேலை
அதன்படி, 3 வாரங்களுக்கு முன்பு தன்னுடைய 12 வயது மகனை 10 ஆயிரம் ரூபாய்க்கு பேரம் பேசி, நாகை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பண்ணை முதலாளியிடம் விற்றுவிட்டார். பண்ணை வேலையுடன், ஆடு மேய்க்கும் வேலையிலும் சிறுவன் ஈடுபடுத்தப்பட்டிருப்பது சிறுவர்கள் நல அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

தமிழக மக்கள் அதிர்ச்சி
இதையடுத்து உடனடியாக விரைந்து சென்று சிறுவனை மீட்டு வந்தார்கள். அப்போதுதான் குடிசை மாற்ற வழி இல்லாமல் தன்னை, தன் தந்தையே அடகு வைத்து விட்டதாக சிறுவன் சொன்னான். இந்த செய்தி நேற்று ஊடகங்களில் வெளியானதும், தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

ஜீரணிக்க முடியவில்லை
மத்திய, மாநில அரசுகள் இருந்தும், எத்தனையோ தனியார் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் புயலுக்கு உதவியும், மாரிமுத்து பெற்ற மகனை பணத்துக்காக விற்றதை யாராலும் ஜீரணிக்கவே முடியவில்லை. அதனால் மாரிமுத்து குடும்பத்துக்கு பலர் உதவ முன்வந்துள்ளனர்.

நாமும் உதவலாமே?
நம் வாசகர்களும் உதவலாமே.. விவரங்களுக்கு:
திரு. மாரிமுத்து
அண்ணா சதுக்கம்
பட்டுக்கோட்டை
செல்போன் எண்: 97918 47700
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications