கஜா புயல் சேதம்.. மத்திய குழு இன்று தஞ்சாவூர், திருவாரூரில் ஆய்வு செய்யும்!
கஜா புயல் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்து வரும் மத்திய குழு இன்று தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் ஆய்வு செய்ய உள்ளது.
தஞ்சாவூர்: கஜா புயல் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்து வரும் மத்திய குழு இன்று தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் ஆய்வு செய்ய உள்ளது.
கஜா புயலால் தமிழகம் பெரிய இழப்பை சந்தித்துள்ளது. 10 மாவட்டத்தில் மக்கள் மொத்தமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
10 வருடமாக நடந்த வளர்ச்சி பணிகள் எல்லாம் மொத்தமாக புயலால் நாசமடைந்துள்ளது. இதையடுத்து மத்திய அரசின் ஆய்வு குழு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகிறது.
புயலால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளை முதற்கட்டமாக மத்திய குழு ஆய்வு செய்து வருகிறது. நேற்று புதுக்கோட்டையில் மத்திய குழு ஆய்வு செய்தது.
புயல் சேத நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்தது. வயல்களை சென்று பார்வையிட்டது. பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை நடத்தியது.
இந்த நிலையில் கஜா புயல் தொடர்பாக தொடர்ந்து மத்திய குழு இன்றும் ஆய்வு செய்யும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
புதுக்கோட்டையில் மத்திய குழு நேற்று ஆய்வு செய்தது. அதைத்தொடர்ந்து இன்று தஞ்சாவூர், திருவாரூரில் மத்திய குழு ஆய்வு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.