கும்பகோணம் அரசு பள்ளி ஆசிரியர் ஆசிரியை நெருக்கம்.. மாணவர்களிடம் சிக்கிய எல்லை மீறிய படங்கள்
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வரும் ஒரு ஆசிரியருக்கு அதே பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியை ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் நெருக்ககமாக இருந்த அந்தரங்க படங்கள் செல்போனில் இருந்து. அதை பார்த்த மாணவர்கள், பணம் தராவிட்டால் வெளியிடுவதாக கூறி ஆசிரியரை மிரட்டி உள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனிடையே சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியை ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டிருக்கிறார்
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வரும் ஒரு ஆசிரியருக்கு அதே பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியைக்கும் இடையே நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களிடையே காதலாக மாறி உள்ளது. அந்த பழக்கம் நாளைடவில் அந்தரங்க உறவாக மாறி உள்ளது. இருவரும் தனிமையில் இருக்கும்போது அந்தரங்க படங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துள்ளார்கள். இதனை அந்த ஆசிரியர் தனது செல்போனில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த படங்கள் அந்த பள்ளியில் ஆசிரியர் பயிற்சி மாணவர்களாக இருக்கும் (பி.எட் மாணவர்கள்) மனக்குன்னம் பகுதியை சேர்ந்த இமயவரம்பன்(வயது 22), குறிச்சி பகுதியை சேர்ந்த கலைசாரதி (22) ஆகிய இருவருக்கும் தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து ஆசிரியரின் செல்போனை திருடியுள்ளனர்.
மேலும் அந்த செல்போனில் உள்ள அந்தரங்க படங்களை வெளியிடப்போவதாகவும், அவ்வாறு வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் தங்களுக்கு பணம் மற்றும் நகை தர வேண்டும் என்று அந்த ஆசிரியரை மிரட்டி வந்தார்களாம்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த ஆசிரியர் தஞ்சை மாவட்டம்ட பந்தநல்லூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி இமயவரம்பன், கலைசாரதி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் பேபி விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பின்னர் ஆசிரியர், ஆசிரியை ஆகிய இருவரும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக கூறி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்தசம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications