Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கும்பகோணம் அரசு பள்ளி ஆசிரியர் ஆசிரியை நெருக்கம்.. மாணவர்களிடம் சிக்கிய எல்லை மீறிய படங்கள்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வரும் ஒரு ஆசிரியருக்கு அதே பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியை ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் நெருக்ககமாக இருந்த அந்தரங்க படங்கள் செல்போனில் இருந்து. அதை பார்த்த மாணவர்கள், பணம் தராவிட்டால் வெளியிடுவதாக கூறி ஆசிரியரை மிரட்டி உள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனிடையே சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியை ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டிருக்கிறார்

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வரும் ஒரு ஆசிரியருக்கு அதே பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியைக்கும் இடையே நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களிடையே காதலாக மாறி உள்ளது. அந்த பழக்கம் நாளைடவில் அந்தரங்க உறவாக மாறி உள்ளது. இருவரும் தனிமையில் இருக்கும்போது அந்தரங்க படங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துள்ளார்கள். இதனை அந்த ஆசிரியர் தனது செல்போனில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

Kumbakonam government school teacher love The twist given by the students

இந்த படங்கள் அந்த பள்ளியில் ஆசிரியர் பயிற்சி மாணவர்களாக இருக்கும் (பி.எட் மாணவர்கள்) மனக்குன்னம் பகுதியை சேர்ந்த இமயவரம்பன்(வயது 22), குறிச்சி பகுதியை சேர்ந்த கலைசாரதி (22) ஆகிய இருவருக்கும் தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து ஆசிரியரின் செல்போனை திருடியுள்ளனர்.

மேலும் அந்த செல்போனில் உள்ள அந்தரங்க படங்களை வெளியிடப்போவதாகவும், அவ்வாறு வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் தங்களுக்கு பணம் மற்றும் நகை தர வேண்டும் என்று அந்த ஆசிரியரை மிரட்டி வந்தார்களாம்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த ஆசிரியர் தஞ்சை மாவட்டம்ட பந்தநல்லூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி இமயவரம்பன், கலைசாரதி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் பேபி விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பின்னர் ஆசிரியர், ஆசிரியை ஆகிய இருவரும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக கூறி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்தசம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+