வெளிநாடுகளிலிருந்து குவிந்த பக்தர்கள்.. விழாக்கோலம் பூண்ட பெரிய கோவில்.. தஞ்சையில் கண்கொள்ளா காட்சி!
Recommended Video
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் இன்று நடக்கும் குடமுழுக்கு விழாவை காண இன்று பல லட்சம் மக்கள் வந்துள்ளனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
1000 வருடங்களுக்கு முன் தஞ்சை பெரிய கோவில், சோழ மன்னன் ராஜராஜ சோழன் மூலம் கட்டப்பட்டது . தஞ்சை பெரிய கோவில் விமானம் பெரிய மலையை குடைந்து உருவாக்கப்பட்டது ஆகும். இங்கு இருக்கும். பெரிய கோவில் நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது

தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் குடமுழுக்கு தொடங்கி நடந்து வருகிறது. காலை 9.30 மணிக்கு விமானத்திற்கு குடமுழுக்கு நடக்கிறது. காலை 10 மணிக்கு மூலவருக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது.தமிழிலும் சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடைபெறுகிறது.
இந்த நிகழ்வை காண பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் குவிந்தனர். பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்து குவிந்த பக்தர்களால் கோவில் விழாக்கோலம் பூண்டது. காலை 7 மணிக்குள் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் அங்கு வருகை புரிந்துள்ளனர்.

23 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விழா நடப்பதால் பக்தர்கள் அதிக அளவில் கூடி இருக்கிறார்கள். இதனால் விழாக்கோலம் பூண்டது தஞ்சை மாநகரம்.திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் வெள்ளம் காணப்படுகிறது.
இன்று முக்கிய அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ஆய்வாளர்கள் வருகை புரிய வாய்ப்புள்ளது. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகாரிக்கப்பட்டுள்ளது. மண்டல ஐஜி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டள்ளது.
தஞ்சையில் மொத்தம் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று பல லட்சம் பேர் கோவிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கோவில் மதிற்சுவருக்குட்பட்ட வளாகத்தில் முன் அனுமதி பெற்ற 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

மக்களுக்கும், விஐபிக்களுக்கும் தனி தனி வரிசை அமைக்கப்பட்டு உள்ளது. கோவில் மதிற்சுவருக்கு வெளியே 50 ஆயிரம் பேர் திரண்டு நின்று குடமுழுக்கைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு செல்ல அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் அங்கு அதிக கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கு மருத்துவ குழுக்கள், பெண்களுக்கு உதவி செய்ய தனிக்குழு, தீயணைப்பு படையினர் தயார் நிலையில் இருக்கிறார்கள்.தமிழர்களின் கட்டடகலையை உலகுக்கு பறைசாற்றிய கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications