சல்லி சல்லியாக நொறுக்கப்பட்ட தனியார் மதுபானக் கடை.. கும்பகோணத்தில் கோவில் அருகே அதிரடி
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கோயில் நகரமான கும்பகோணத்தில் உச்சி பிள்ளையார் கோவில் மற்றும் நாகேஸ்வரன் கோவில் அருகே புதிதாக நடத்தப்படும் தனியார் மதுபான கூடம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது . குறிப்பிட்ட தனியார் மதுபான கூடத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் மதுபான கூடத்தை சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .
தமிழ்நாட்டில் தனியார் மதுக்கடைகள் திறக்க அரசு கொள்கை ரீதியாக அனுமதிப்பது இல்லை. டாஸ்மாக் மட்டுமே சில்லறை வினியோகமாக மதுபானத்தை விற்கிறது. பெரிய ஸ்டார் ஓட்டல் மதுபான உரிமங்களைப் பெறுவதற்கு கடுமையான விதிமுறைகள் உள்ளது. அது எதார்த்தத்தில் சாத்தியமே இல்லை.. எனவே 'மனமகிழ் மன்றம்' அல்லது 'கிளப்' என்ற பெயரில் தனியார் மதுக்கடைகள் உரிமம் பெறப்படுகிறது. இதில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்கப்பட வேண்டும் . இதுதான் அடிப்படை விதி. ஆனால் டாஸ்மாக் போல் மனமகிழ் மன்றங்கள் தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக செயல்படுவதாக புகார்கள் இருக்கிறது. அத்துடன் நேரத்தை பொறுத்தவரை காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்குகின்றன

அதேநேரம் எத்தனை மனமகிழ் மன்றங்கள் உள்ளன என்பது பற்றி சரியான புள்ளி விவரங்கள் இல்லை. எனினும் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட ஒரு அறிக்கையில், "திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஆண்டு தான் 500 மதுக்கடைகளை மூடினார்கள். ஆனால், கடந்த மூன்றரை ஆண்டு கால திமுக ஆட்சியில் 600 மனமகிழ்மன்றங்கள் திறக்கப்பட்டு முழுவீச்சில் மதுவணிகம் நடைபெறுகிறது.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் முந்தைய ஆட்சிகளில் 900 மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டிருந்தன. இப்போது திறக்கப்பட்டிருப்பதையும் சேர்த்து தமிழ்நாட்டில் மொத்தம் 1500 மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் மூடப்பட்ட மதுக்கடைகளை விட அதிக எண்ணிக்கையில் மனமகிழ்மன்றங்களை திறந்து வைக்கப்பட்டுள்ளது" என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் கோயில் நகரமான கும்பகோணத்தில் உச்சி பிள்ளையார் கோவில் மற்றும் நாகேஸ்வரன் கோவில் அருகே புதிதாக நடத்தப்படும் தனியார் மதுபான கூடம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது . இதில் மது அருந்துவதற்காகநேற்றுஅங்கு வந்த மது பிரியர்கள் மது அருந்திய பின் பில் தொகையில் முரண்பாடு இருப்பதாக மதுக்கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் வாக்குவாதம் முற்றியதில் மதுக்கடையின் உள்ளே இருந்த மேஜை, நாற்காலிகளை தூக்கி எறிந்தும் காலி மதுப்பாட்டில்களை தரையில் உடைத்தும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்இதனால் மதுக்கடையில் மதுக் குடித்து கொண்டிருந்தவர்கள் அலறியடித்து அங்கிருந்துவெளியேறி ஓடியுள்ளனர். பொருட்களை சேதப்படுத்திய கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. இது குறித்து சரித்திர பதிவேடு குற்றவாளி சரத் உள்ளிட்ட நான்கு நபர்கள் மீது மேற்கு காவல் நிலையத்தில் புகார்அளிக்கப்பட்டது .
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து தப்பியோடிய நபர்களை சிசிடிவி காட்சிகளின் மூலம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சூறையாடிய நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர் இந்த சம்பவம் உச்சிப் பிள்ளையார் கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புதிதாக வந்த இந்த மதுபான கடைக்கு( 5star)பல்வேறு கட்சியினர் திறக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications