சல்லி சல்லியாக நொறுக்கப்பட்ட தனியார் மதுபானக் கடை.. கும்பகோணத்தில் கோவில் அருகே அதிரடி
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கோயில் நகரமான கும்பகோணத்தில் உச்சி பிள்ளையார் கோவில் மற்றும் நாகேஸ்வரன் கோவில் அருகே புதிதாக நடத்தப்படும் தனியார் மதுபான கூடம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது . குறிப்பிட்ட தனியார் மதுபான கூடத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் மதுபான கூடத்தை சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .
தமிழ்நாட்டில் தனியார் மதுக்கடைகள் திறக்க அரசு கொள்கை ரீதியாக அனுமதிப்பது இல்லை. டாஸ்மாக் மட்டுமே சில்லறை வினியோகமாக மதுபானத்தை விற்கிறது. பெரிய ஸ்டார் ஓட்டல் மதுபான உரிமங்களைப் பெறுவதற்கு கடுமையான விதிமுறைகள் உள்ளது. அது எதார்த்தத்தில் சாத்தியமே இல்லை.. எனவே 'மனமகிழ் மன்றம்' அல்லது 'கிளப்' என்ற பெயரில் தனியார் மதுக்கடைகள் உரிமம் பெறப்படுகிறது. இதில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்கப்பட வேண்டும் . இதுதான் அடிப்படை விதி. ஆனால் டாஸ்மாக் போல் மனமகிழ் மன்றங்கள் தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக செயல்படுவதாக புகார்கள் இருக்கிறது. அத்துடன் நேரத்தை பொறுத்தவரை காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்குகின்றன

அதேநேரம் எத்தனை மனமகிழ் மன்றங்கள் உள்ளன என்பது பற்றி சரியான புள்ளி விவரங்கள் இல்லை. எனினும் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட ஒரு அறிக்கையில், "திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஆண்டு தான் 500 மதுக்கடைகளை மூடினார்கள். ஆனால், கடந்த மூன்றரை ஆண்டு கால திமுக ஆட்சியில் 600 மனமகிழ்மன்றங்கள் திறக்கப்பட்டு முழுவீச்சில் மதுவணிகம் நடைபெறுகிறது.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் முந்தைய ஆட்சிகளில் 900 மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டிருந்தன. இப்போது திறக்கப்பட்டிருப்பதையும் சேர்த்து தமிழ்நாட்டில் மொத்தம் 1500 மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் மூடப்பட்ட மதுக்கடைகளை விட அதிக எண்ணிக்கையில் மனமகிழ்மன்றங்களை திறந்து வைக்கப்பட்டுள்ளது" என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் கோயில் நகரமான கும்பகோணத்தில் உச்சி பிள்ளையார் கோவில் மற்றும் நாகேஸ்வரன் கோவில் அருகே புதிதாக நடத்தப்படும் தனியார் மதுபான கூடம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது . இதில் மது அருந்துவதற்காகநேற்றுஅங்கு வந்த மது பிரியர்கள் மது அருந்திய பின் பில் தொகையில் முரண்பாடு இருப்பதாக மதுக்கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் வாக்குவாதம் முற்றியதில் மதுக்கடையின் உள்ளே இருந்த மேஜை, நாற்காலிகளை தூக்கி எறிந்தும் காலி மதுப்பாட்டில்களை தரையில் உடைத்தும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்இதனால் மதுக்கடையில் மதுக் குடித்து கொண்டிருந்தவர்கள் அலறியடித்து அங்கிருந்துவெளியேறி ஓடியுள்ளனர். பொருட்களை சேதப்படுத்திய கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. இது குறித்து சரித்திர பதிவேடு குற்றவாளி சரத் உள்ளிட்ட நான்கு நபர்கள் மீது மேற்கு காவல் நிலையத்தில் புகார்அளிக்கப்பட்டது .
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து தப்பியோடிய நபர்களை சிசிடிவி காட்சிகளின் மூலம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சூறையாடிய நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர் இந்த சம்பவம் உச்சிப் பிள்ளையார் கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புதிதாக வந்த இந்த மதுபான கடைக்கு( 5star)பல்வேறு கட்சியினர் திறக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி












Click it and Unblock the Notifications