சாவு இப்படியுமா வரும்.. திடீரென வீசிய பலத்த காற்று.. இளம் பெண்களுக்கு நொடியில் நடந்த துயரம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் பலத்த காற்று வீசிய நிலையில், வளையப்பேட்டை அருகே மரம் முறிந்து விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்ற வள்ளி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் சென்ற சோபனா என்ற பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆடி மாதம் வீசும் காற்று அம்மிக்கல்லையே தூக்கி கொண்டு போகும் என்று சொல்வார்கள். ஆடி மாதம் காற்றுக்காலம் ஆகும்.இந்த சமயத்தில் தென்மேற்கு பருவமழையும் தமிழகத்தில் பரவலாக பெய்யும்.

இந்நிலையில் தென்மேற்கு பருவ காற்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் பலமாக வீசியது. அப்போது வளையப்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் வள்ளி என்ற பெண்ணும். சோபனா என்ற பெண்ணும் சென்று கொண்டிருந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் பலத்த காற்றின் காரணமாக அந்த பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது. அந்த மரம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வள்ளி மீது விழுந்தது.
இதில் வள்ளி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். வள்ளி உடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற சோபனா படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே ஓடிச்சென்று மரக்கிளையில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருத வள்ளி மற்றும் சோபானாவை மீட்டனர்.
இதில் வள்ளி அப்போதே இறந்துவிட்டார். சோபானா மட்டும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மரம் முறிந்து விழுந்து இளம் பெண் உயிரிழந்த சம்பவம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மக்களே இது காற்றுக்காலம் என்பதால் சாலைகளில் கவனமாக சென்று வாருங்கள். பொதுவாக மழை காலங்களில் சாலைகள் மோசமாக இருக்கும்.எனவே இருசக்கர வாகனத்தில் செல்வோர் எச்சரிக்கையாக செல்ல வேண்டும்.இரவு நேரங்களில் தெரியாத சாலைகளில் பயணிப்பதை தவிர்ப்பது நல்லது.
ஏனெனில் இரவில் தெரியாத சாலைகளில் எங்கு பள்ளம் இருக்கும் என்பது நமக்கு தெரியாது. சாலைகளில் செல்லும் போது இருசக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிந்து செல்வது பாதுகாப்பானது ஆகும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications