எங்க பரமேஸ்வரிக்கு யாராச்சும் உதவி செய்யுங்க.. கண்ணீர் மல்க கேட்கும் சமூக ஆர்வலரின் தாயார்
பேத்திக்கு மருத்துவ உதவி செய்யுமாறு பாட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்
Recommended Video
தஞ்சை: "எங்க பரமேஸ்வரிக்கு யாராச்சும் உதவி செய்யுங்களேன்" என்று கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஆனந்த பாபுவின் தாய் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தஞ்சை அருகே விளார் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தபாபு. 33 வயசு. கிராமத்தில் குடிநீர் தொட்டியை இயக்கி வருகிறார். இவர் ஒரு சமூக ஆர்வலர் என்பதால் ஊர் பொது காரியங்களை முன்னின்று செய்து வந்தார்.

கடந்த வாரம், பஞ்சாயத்து லாரி தண்ணீரை பதுக்கியதை தட்டிக் கேட்க போய், அப்போது 4 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இவரது அப்பா ஒரு கூலி தொழிலாளி, ஆனந்த் பாபுவிற்கு 3 சகோதரிகள்.
மூத்த சகோதரியான விஜயலட்சுமிக்கு வாய் பேச முடியாது. மாற்றுத் திறனாளியும்கூட. இவரது மகள் பரமேஸ்வரி. பிறந்ததிலிருந்தே சுமார் 14 ஆண்டுகளாக கை கால்கள் மற்றும் இடுப்புப் பகுதிகள் செயல்படாமல் படுத்த படுக்கையில் உள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்ப பின்னணி உள்ள நிலையில், வீட்டில் யாருக்குமே மருத்துவம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
"ஆனந்த்பாபு மட்டும்தான் குடும்பத்தை கவனிச்சிட்டு இருந்தான். இப்போ அவனை கொன்றுவிட்டார்கள் எங்கள் குடும்பமே கஷ்டத்தில் தவிக்குது. யாராவது என் பேத்திக்கு மருத்துவம் பார்க்க உதவி செய்தால் நல்லா இருக்கும் என்று ஆனந்த்பாபுவின் தாயார் கெஞ்சி கேட்டு கொண்டுள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications