Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட்வைஸ் செய்த ஆலோசகர்.. சங்கீதா பற்றி வாயை திறக்காத விஜய்.. விவாகரத்து பற்றி பேசலையே.. ஏன்?

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: இன்று தஞ்சாவூரில் பேசிய தவெக தலைவர் விஜய் தனது மனைவி சங்கீதா பற்றி எதுவும் பேசாமல் தவிர்த்து உள்ளார். கடந்த சில நாட்களாக ஊடக வெளிச்சத்தில் தகித்துக் கொண்டிருக்கும் அவரது குடும்பப் பிரச்சனைகள் மற்றும் மனைவி சங்கீதாவின் விவாகரத்து புகார் குறித்து, ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனம் காத்தது பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.

sangeetha vijay

கோட்டை கட்டிய 'தளபதி'... கோட்டை விட்டாரா 'தலைவர்'?

தஞ்சாவூர் அய்யசாமிப்பட்டியில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட கூட்டத்தில், 2026 தேர்தலுக்கான வியூகங்களை விஜய் வகுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. "ஸ்டாலினா? விஜய்யா?" என நேரடி சவால்களை வீசியவர், தன் வீட்டு வாசலில் வந்து நிற்கும் சட்டப் போராட்டத்தை மட்டும் லாவகமாகத் தவிர்த்துவிட்டார்.

பெண் வாக்காளர்களின் ஆதரவுதான் ஒரு கட்சியின் வெற்றிக்கு அஸ்திவாரம் என்பதை அறிந்தே, "பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்போம்" என்று கடந்த முறை மேடையில் முழங்கினார். ஆனால் இந்த முறை அதையும் தவிர்த்துவிட்டார், நிஜ வாழ்க்கையில் தன் மனைவி முன்வைத்த புகார்களுக்கு அவர் பதில் அளிக்காதது, அவரது 'குடும்பப் பாங்கான' பிம்பத்தை (Family-man Image) பாதிக்குமோ என்ற அச்சம் கட்சி நிர்வாகிகளிடையே மெல்ல எட்டிப் பார்க்க தொடங்கி உள்ளது.

சங்கீதா புகாரால் தனக்கு டேமேஜ் அதிகம் ஆகிவிட்டதை உணர்ந்த விஜய்.. இன்று அதை பற்றியும் பேசவில்லை, பெண்கள் பாதுகாப்பு விவகாரம் பற்றியும் பேசவில்லை. அவரிடம் இருக்கும் அரசியல் ஆலோசகர்கள் கொடுத்த அட்வைஸ்படி அவர் சங்கீதா பற்றி தவிர்த்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சங்கீதா அடுக்கிய சரமாரி புகார்கள்!

சமீபத்தில் செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்த 12 பக்க மனுவில் சொல்லப்பட்ட தகவல்கள் கோலிவுட் முதல் கோட்டை வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. சங்கீதாவின் முக்கிய புகார்கள் இதோ:

துரோகம் மற்றும் ரகசிய உறவு: 2021-ஆம் ஆண்டு முதல் விஜய் ஒரு பிரபல நடிகையுடன் ரகசிய உறவில் இருப்பதாகவும், பலமுறை அவர்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்றதாகவும் சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார்.

மன ரீதியான சித்ரவதை: அந்த நடிகை தனது சமூக வலைதளங்களில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டபோது, விஜய் அதைத் தடுக்கவோ கண்டிக்கவோ இல்லை. இது தனக்கும் தன் குழந்தைகளுக்கும் பொதுவெளியில் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியதாக அவர் ஆதங்கப்பட்டுள்ளார்.

பொருளாதாரக் கட்டுப்பாடு: தன்னைத் தனிமைப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், தனது செலவுகளுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்து பொருளாதார ரீதியாக நெருக்கடி கொடுத்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமரச முயற்சிகள் தோல்வி: 2021 முதல் 2022 வரை கவுன்சிலிங் மூலம் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முயன்றும், விஜய் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை என்பது சங்கீதாவின் வாதம்.

வியூகமா? பயமா?

விஜய் ஏன் பேசவில்லை? ஒருவேளை மேடையில் இதைப் பற்றிப் பேசினால் அது இன்னும் பெரிய விவாதமாக மாறும் என்று அவர் நினைத்திருக்கலாம். அல்லது, "தனிப்பட்ட வாழ்க்கை வேறு, அரசியல் வேறு" என்பதைத் தனது மௌனத்தின் மூலம் சொல்ல வருகிறாரா?

"நாங்கள் மக்களுக்காக வந்திருக்கிறோம், தனிப்பட்ட விமர்சனங்களுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை" என்று தவெக தொண்டர்கள் மார்தட்டினாலும், எதிர்க்கட்சிகள் இந்த 'சங்கீதா விவகாரத்தை' வரும் தேர்தலில் விஜய்க்கு எதிராக ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தக் காத்திருக்கின்றனர் என்பதே நிதர்சனம்.

தஞ்சையில் அரசியல் பாடம் எடுத்த விஜய், தன் வீட்டுப் பாடத்தில் சறுக்குகிறாரா அல்லது இதுவும் ஒரு 'சைலண்ட்' ஸ்கெட்ச்சா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+