தஞ்சை கல்லணை கால்வாயில் இரவில் மனைவியுடன் குளித்த கணவன்.. கனவிலும் நினைக்காத சம்பவம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரைச் சேர்ந்த அந்தோணி ஜேசிபி ஆபரேட்டர் ஆவார்.இவர் தனது மனைவி பேபி ஷாலினி உடன் பூதலூர் கல்லணை கால்வாய் ஆற்றின் படித்துறையில் குளித்துக் கொண்டிருந்தார். ஆற்றில் முழு கொள்ளளவில் தண்ணீர் செல்வதால் யாரும் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியதை கேட்காமல் குளித்தார்களாம். இந்நிலையில் மனைவி கண் முன்பே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். அவரது உடல் 3 கிமீ தூரம் தள்ளி இன்று காலை மீட்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் பகுதி வழியாக செல்லும் கல்லணை கால்வாய், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கல்லணையிலிருந்து பிரிந்து, பாசனத்திற்காக நீரை கொண்டு செல்லும் ஒரு முக்கிய கால்வாய் ஆக இருக்கிறது. இந்த கால்வாய் தான் காவிரி நீர் பாய்ந்தோடி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சுமார் 2.25 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி தருகிறது. கல்லணை கால்வாய் என்பது தஞ்சாவூரில் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆறு என சொல்லலாம். இந்த கால்வாய் பல 100 கிலோமீட்டர் தூரம் செல்கிறது.

இந்த கால்வாயில் தற்போது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.இந்த சூழலில் பூதலூர் கல்லணை கால்வாய் படித்துறையில் நேற்று இரவு குளித்துக் கொண்டிருந்த கணவர், மனைவி கண் முன்பே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். அவரது உடல் இன்று காலை மீட்கப்பட்டிருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே சின்ன காங்கேயம் பட்டி மாதா கோவில் தெருவை சேர்ந்த ஜோசப் என்பவரின் மகன் அந்தோணிக்கு 40 வயது ஆகிறது.இவர் ஜேசிபி ஆபரேட்டர் ஆவார். இவரது மனைவி பேபி ஷாலினி (35). இவர்கள் இருவரும் நேற்று இரவு 10 மணி அளவில் பூதலூர் கல்லணை கால்வாய் ஆற்றின் படித்துறையில் குளித்துக் கொண்டிருந்தனர்.
ஆற்றில் முழு கொள்ளளவில் தண்ணீர் செல்வதால் யாரும் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் இதை யாரும் பொருட்படுத்துவதில்லை. இந்நிலையில் அந்தோணி மற்றும் பேபி ஷாலினி இருவரும் படித்துறையில் குளித்துக் கொண்டிருந்தனர்.
இதில் அந்தோணி ஆற்றில் இறங்கி குளித்தபோது தண்ணீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்து கதறி துடித்த பேபி ஷாலினி அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். இருப்பினும் ஆற்றின் வேகத்தில் அடித்து செல்லப்பட்ட அந்தோணியை யாராலும் மீட்க முடியவில்லை. இரவு நேரம் என்பதால் வெளிச்சம் போதாமல் ஆற்றில் அந்தோணியை தேட முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் பூதலூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் சித்திரக்குடி பாலம் பகுதியில் அந்தோணி உடல் மீட்கப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications