முருகனின் திருவிளையாடல்.. வெள்ளை மயில் ரொம்ப க்யூட்.. பக்தி பரவசத்தில் தஞ்சாவூர் மக்கள்
தஞ்சாவூர்: வெள்ளை நிற மயில் ஒன்று தஞ்சாவூர் ஈச்சங்கோட்டை அடுத்த கல்லணை ஆற்றங்கரையில் தென்பட்டது. ரொம்ப க்யூட் என்று மகிழ்ந்த மக்கள் அதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உலகின் மிக அழகான பறவைகளில் ஒன்று மயில், அதன் வண்ணம், விசிறி போன்ற வால், நீண்ட வடிவான இறகுகள், இணையைக் கவர அவைகள் ஆடும் அற்புத நடனம் என பார்ப்பவர்களை எப்போதும் பிரம்மிக்க வைக்கின்றன. இதில் வெள்ளை நிற மயில் என்றால் இன்னும் சிறப்பு.

முருகப்பெருமானின் வாகனமாக முருக பக்தர்களால் மயில் வணங்கப்படுகிறது. முருகனின் வேலில் இருந்து தப்பிப்பதற்கு சூரபத்மன் பல வடிவங்களை எடுத்தான். திருச்செந்தூரின் அருகில் உள்ள மாப்பாடு என்னும் மாந்தோப்பில் மாமரமாக இருந்த சூரபத்மனை முருகனின் வேல் இரண்டாக பிளந்தது. சூரசம்ஹாரம் முடிந்த பிறகு சேவலாகவும், மயிலாகவும் மாறி முருகனின் கொடியாகவும், வாகனமாகவும் மாறின.
பறவைகளில் மிக அழகானதும், சாதுவானது மயில். சூரபத்மன் அசுர குணத்தோடு இருந்தாலும் முருகனிடம் வந்ததும் சாந்தமானதைப் போல, முருகப் பெருமானை வழிபடக்கூடிய பக்தர்கள் அவரை சரணடையும் போது மன அமைதியும், சாதுவாகவும் மாறி வாழ்க்கையில் நிம்மதி அடைகின்றனர்.
உடல், மன, புத்தியினால் ஏற்பட்டிருக்கும் அகந்தையை அகற்றி நீல நிறமாகிய மயில் மேல் முருகன் செல்வதைப் போன்று கவனத்தை உள்திரும்பி ஆன்மாவில் நிலைக்கச் செய்ய வேண்டிய கடமையை உணர்த்துவதே மயில் வாகனத்தின் தத்துவம்.
முருகனின் மயில் வாகனத்தின் காலடியில் கருநாகம் பிடிபட்டிருக்கும். ஆனால் கொல்லப்படுவதில்லை. காலடியில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். கருநாகம் ஒருவனுடைய அகந்தையை உணர்த்துகின்றது. விஷ ஜந்துவாகிய அகந்தையை காலடியில் போட்டுக் கட்டுப்படுத்தி, புற அழகிலிருந்து கவனத்தை உட்திருப்பினால் மட்டுமே இறைவனை அறிய முடியும் என்கிற தத்துவத்தினை உணர்த்துவதே மயில் வாகனம்.
வெள்ளை நிற மயில்கள் மன அமைதியை உணர்த்துகிறது. தஞ்சாவூரில் கல்லணை ஆற்றங்கரையில் தென்பட்ட மயிலைக் கண்ட மக்கள் இது முருகப்பெருமானின் திருவிளையாடலா என்று கூறி வணங்கியதோடு க்யூட்டான அந்த மயிலை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். கந்த சஷ்டிக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் அரோகரா முழக்கத்தோடு வணங்கி பரவசமடைந்தனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications