பெட்டிக்கடை முனியாண்டி.. 60 வயசு.. மிட்டாய் கொடுத்தே நாசம் செய்த அக்கிரமம்.. தேனியில் பரபரப்பு
Recommended Video
தேனி: இந்த முனியாண்டிக்கு 60 வயசாகிறது.. ஆனால் வயசுக்கும் பண்ற காரியத்துக்கும் சம்பந்தமே இல்லை. உடம்பு முழுவதும் காமம் ஏறிய மனித மிருகம் இது!
தேனி அல்லிநகரத்தில் ஒரு பெட்டிக்கடை வைத்திருக்கிறார் முனியாண்டி. இவர் வீட்டின் அருகே முத்துப்பாண்டி என்பவர் குடியிருக்கிறார். இவருக்கு 2 மகள்கள், ரித்திகா என்ற 9 வயது மகள், தீபிகா என்ற 6 வயது மகள் உள்ளனர்.
முனியாண்டி பெட்டிக்கடை வைத்திருப்பதால், நிறைய மிட்டாய்களை இந்த 2 குழந்தைகளுக்கும் கொண்டு போய் கொடுத்து பலமுறை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார்.

மொட்டை மாடி
பல நாட்களாக இப்படி நடப்பதை நிறைய பேர் பார்த்துள்ளனர். சம்பவத்தன்று, இப்படித்தான் தன் வீட்டு மொட்டை மாடிக்கு 2 குழந்தைகளையும் முனியாண்டி அழைத்து சென்றுள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் முத்துப்பாண்டியிடம் இது பற்றி சொல்லி உள்ளனர்.

அதிர்ச்சி
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த முத்துப்பாண்டி, சந்தேகத்தின் பேரில் முனியாண்டியின் வீட்டு மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது, தனது குழந்தைகளை முனியாண்டி பாலியல் சீண்டலில் ஈடுபடுத்தப்பட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

முனியாண்டி கைது
ஓடிச்சென்று, தன் குழந்தைகளைக் காப்பாற்றியதுடன், முனியாண்டியையும் கையும் களவுமாக பிடித்தார். இதனையடுத்து முத்துப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் அல்லிநகரம் போலீசார் முனியாண்டியை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு தேனி அனைத்து மகளிர் போலீசுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

மிட்டாய்
அங்கு முனியாண்டியிடம் நடத்திய விசாரணையில், இவ்வளவு காலம் நிறைய சிறுமிகளை இப்படித்தான் மிட்டாய் கொடுத்து முனியாண்டி பாலியல் கொடுமை செய்துள்ளது தெரியவந்தது. மிட்டாய் இல்லையென்றால், கூல்டிரிங்ஸ் கொடுத்து அந்த பிஞ்சுகளை நாசம் செய்வாராம். இதனையடுத்து பெட்டிக்கடை முனியாண்டி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து செய்யப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications