உடல் முழுவதும் காயங்களுடன் கல்லூரி மாணவர் மர்மச் சாவு.. ஆண்டிப்பட்டியில் பரபரப்பு
Recommended Video
ஆண்டிப்பட்டி: ஆண்டிப்பட்டி அருகே கல்லூரி மாணவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருப்பதால் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டியை அடுத்த ஜக்கம்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் நாகேந்திர பிரசாத் (18). இவர் ஈரோடு வெங்கடேஸ்வரா கல்லூரியில் முதலாம் ஆண்டு சென்று வந்துள்ளார்.
கல்லூரி விடுமுறை என்பதால் ஜக்கம்பட்டிக்கு வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சினிமாவிற்கு செல்வதாக கூறி 6 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் நேற்று திங்கள்கிழமை வரை அவர் வீடு திரும்பவில்லை.

தகவல்
அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் பெற்றோர்கள் விசாரித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று ஜக்கம்பட்டி ராயல்பள்ளி பின்புறம் இறந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக அருகில் இருந்தவர்கள் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உறுதி
நாகேந்திர பிரசாத்தை போலீஸார் தேடி வந்த நிலையில் அவரது பெற்றோரை அழைத்து சென்று அடையாளம் காட்டுமாறு கூறினர். அவர்களும் இறந்தது நாகேந்திர பிரசாத்தான் என உறுதி செய்தனர்.

பலத்த காயம்
இறந்த சடலத்தை மோப்ப நாய் வைத்து சோதித்ததில் சிறிது தூரம் ஓடி நின்றது. மருத்துவர்கள் சோதனையில் தலை, கை, கன்னம், மார்பு பகுதியில் பலத்த காயம் இருப்பதை கண்டறிந்தனர்.

பெரும் பரபரப்பு
இதனைத் தொடர்ந்து நாகேந்திர பிரசாத் உடல்களில் பலத்த காயங்கள் இருப்பதால் கொலையா தற்கொலையா என ஆண்டிப்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications