தேனி வழியாக சபரிமலைக்கு போறீங்களா.. ஐயப்ப பக்தர்கள் கவனிக்க வேண்டிய மூன்று முக்கியமான விஷயம்
தேனி : கார்த்திகை பிறந்துவிட்டது. பலரும் சபரிமலைக்கு விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க பயணிப்பார்கள்.. ஐயப்ப பக்தர்கள் கவனிக்க வேண்டிய மூன்று விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு செல்ல பொதுவாக மூன்று வழிகள் உள்ளன. குற்றாலம், செங்கோட்டை வழியாக பத்தினம் திட்டா மாவட்டத்திற்குள் நுழைந்து அப்படியே சபரிமலை போகலாம். இதேபோல் கோவை வழியாக கேரளாவிற்குள் நுழைந்து கோட்டயம் வழியாக குமுளி நோக்கி பயணித்து சபரிமலைக்கு போகலாம். மூன்றாவது வழி, தமிழ்நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் நேரடியாக தேனி வந்து அங்கிருந்து குமுளி வழியாக சபரிமலை போக முடியும்.

இதில் மூன்றாவதாக சொன்ன தேனி வழியாகவே தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்கள் சபரிமலைக்கு போவார்கள்.
ஆனால் மிக எளிதான வழி என்றால், அது திண்டுக்கல், தேனி, குமுளி வழியாக செல்வதே வெளிமாநிலத்தவருக்கும், சென்னை மக்களுக்கும் எளிதானது. தமிழ்நாட்டை தாண்டி, கேரளா, ஆந்திரா,கர்நாடகா தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதி மக்களும் சபரிமலைக்கு செல்கிறார்கள்.
சபரிமலைக்கு செல்வோர் கவனிக்க வேண்டிய முதல் விஷயம்: தேனி வழியாக சபரிமலைக்கு செல்வோர், கம்பத்தில் இருந்து மாற்றுப்பாதையில் செல்ல வேண்டியதிருக்கும்.தேனியை அடுத்து கம்பம், கம்பம் மெட்டு, அதன்பிறகு குமுளியை அடைந்து வண்டிப் பெரியார், அதன்பிறகு எரிமேலி செல்ல முடியும். சபரிமலை தரிசனம் முடிந்து வரும் போது, நேரடியாக குமுளி வழியாக கம்பம் தேனியை அடைந்து போக வேண்டி ஊருக்கு போகலாம்.
இரண்டாவது விஷயம்: சபரிமலை செல்வோர் தேனி மாவட்டத்தில் சில கோயில்கள் உள்ளன. அங்கு 24 மணி நேரமும் தங்கி கொள்ள முடியும். ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் பயணத்தை தொடரலாம். பாதயாத்திரை செல்வோருக்கு பல்வேறு இடங்களில் தங்க வசதிகள் உள்ளன.
மூன்றாவது விஷயம்: சபரிமலை செல்ல பலரும் வேன், கார், பஸ் பிடித்து செல்வார்கள். இந்த முறை தேனிக்கு நேரடியாக ரயில் உள்ளது. எனவே ரயிலில் பயணித்து தேனி வந்து அங்கிருந்து எளிதாக ஒரே பேருந்தில் சில மணி நேரத்தில் சபரிமலையை அடைய முடியும். சென்னை டூ தேனிக்கு 390 ரூபாய் தான் டிக்கெட், நேரடியாக அங்கிருந்து 150 முதல் 200 ரூபாயில் சபரிமலையை அடைய முடியும்.
சபரிமலை பயணத்தை முடித்துவிட்டு தேனி வழியாக வரும் போது, வரும் வழியில் வாகமன், தேக்கடி, இடுக்கி அணை, சுருளி, மூணாறு போன்றவற்றிருக்கு போக முடியும்.இதேபோல் கொடைக்கானல், பழனிக்கும் போகவும் முடியும். ஆன்மீக யாத்திரிகர்கள் பலர் சபரிமலை போன கையோடு பழனிக்கும் செல்வதும் வழக்கம். அந்த வகையில் பழனி செல்ல குமுளி தேனி வழியாக செல்வதே எளிதாக இருக்கும்.
கார்த்திகை பிறந்துவிட்ட நிலையில், புதிய ரயில் பாதையில் பக்தர்கள் பலர் தேனிக்கு ரயிலில் பயணித்து வருகிறார்கள்.இந்நிலையில் அடுத்த இரு மாதங்களில் தேனி ரயிலை பலரும் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனிடையே சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து இயக்கப்படுகிறது.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்யாத மேனேஜர்களுக்கு கோடிகளில் போனஸ்.. 173 கோடி சம்பளம் வாங்கும் சிஇஓ -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
அபிஷேக் சர்மா அவுட்.. ரிங்கு சிங் இன்.. அரையிறுதியில் மொத்தமாக மாறப்போகும் இந்திய பிளேயிங் லெவன்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications