ரேஷன் கடையில் எவ்வளவு தான் டெக்னாலஜி வந்தாலும்.. மாறாத காட்சிகள்.. புலம்பும் பொதுமக்கள்
தேனி: ரேஷன் கடையில் தராசுடன், பில்போடும் கருவி இணைக்கப்பட்டுள்ளதால் பொருட்கள் வினியோகம் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டிருக்கிறது. சரியான எடைக்கு பொருட்களை ரேஷன் கடை ஊழியர்கள் வைத்தாக வேண்டும். எடை குறைந்தாலும் சிக்கல், கூடினாலும் சிக்கல் என்ற நிலை உள்ளதால் பொருட்கள் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று மக்கள் தெரிவிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் கீழ் 35,296 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் 2.19 கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த கார்டுதாரர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்களின் எடை குறைவாக உள்ளதாக புகார்கள் அதிகரித்தது. மேலும் அடிக்கடி இணையதளம் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் ரேஷன் கார்டுதாரர்கள் கைரேகைகளை பதிவு செய்ய முடியாமல் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.

இதனை தடுக்க தமிழக அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் தற்போது எலக்ட்ரானிக் தராசுகள் POS மெஷினுடன் இணைக்கப்பட்டு, எடைபோடும் முறை அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ரேஷன் கடையில் தராசுடன், பில்போடும் கருவி இணைக்கப்பட்டுள்ளதால், பொருட்கள் சரியான எடையில் வழங்கப்படுவதை உறுதி செய்ய முடியும். மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை சரியான எடையில் வழங்கும் நோக்கத்துடன் அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
எப்படி உணவுப் பொருட்கள் வழங்கப்படும் தராசு இணைக்கப்படுகிறது
ரேஷன் கடைகளில் தற்போது எலக்ட்ரானிக் தராசு வைக்கப்பட்டுள்ளது. இந்த எடைபோடும் எலக்ட்ரானிக் தராசுகள், POS கருவியுடன் புளூடூத் மூலம் இணைக்கப்படுகிறது. இதன் மூலம், பில் போடும் போது எடையை தானாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனால், எடை குறைவு போன்ற புகார்களை தவிர்க்க முடியும் என்று அரசு நம்புகிறது. இது, ரேஷன் கடைகளில் முறைகேடுகளைத் தடுப்பதற்கும், மக்களுக்கு சரியான எடையில் பொருட்கள் கிடைப்பதையும் உறுதி செய்யும் என்று அரசு அறிமுகம் செய்துள்ளது.
மென்பொருள் எப்படி இருக்கும்
இதுகுறித்து கூட்டுறவு துறை அதிகாரிகள் கூறும் போது, ரேஷன் கடைகளில் பில்போடும் கருவியான பி.ஓ.எஸ். மின்னணு எந்திரத்தில் ரேஷன் கார்டுதாரர்கள் கைரேகை வைத்தால் மட்டுமே ரசீது போடும் வகையில் கருவியின் மென்பொருள் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதன்மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது.
தற்போது மின்னணு எடை தராசும், பி.ஓ.எஸ். கருவியும், 'வைபை' மற்றும் 'புளூடூத்' மூலமாக இணைக்கப்பட்டு உள்ளது. இதனால் ரேஷன் ஊழியர், தராசில் எவ்வளவு பொருள் வைக்கிறாரோ, அந்த எடை தான் பி.ஓ.எஸ். கருவியில் பதிவு செய்யப்படுகிறது. மேலும் அரிசி, சீனி, பருப்பு என ஒவ்வொரு பொருட்களுக்கும் பி.ஓ.எஸ். கருவியில் காட்டப்படும் அளவு எடை இருந்தால் மட்டுமே வினியோகம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
எடை குறைந்தால் சிக்கல்
எனவே சரியான எடைக்கு பொருட்களை ரேஷன் கடை ஊழியர்கள் வைத்தாக வேண்டும். எடை குறைந்தாலும் சிக்கல், கூடினாலும் சிக்கல் என்ற நிலை உள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு எடை குறைவு என்ற பிரச்சினை வராது. தற்போது ரேஷன் கடை ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் காலதாமதமின்றி ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள். அதேநேரம் எடை சரியாக வருவதற்காக மெனக்கெட வேண்டியுள்ளதால், ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கி செல்ல காலதாமதம் ஏற்படுகிறது என்று மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications