தகாத உறவு, கர்ப்பம்.. புட்டு புட்டு வைத்த டிஎன்ஏ டெஸ்ட்.. மகளை தாயாக்கிய அப்பா.. இவர் ஒரு சாமியாராம்
மகளை கர்ப்பமாக்கிய தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்
தேனி: 17 வயது சிறுமி ஆண் குழந்தை பெற்றெடுத்த வழக்கில், பெற்ற தந்தையே அவரை பாலியல் பலாத்காரம் செய்தது டிஎன்ஏ டெஸ்ட்டில் அம்பலமாகி உள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது தேவதானப்பட்டி என்ற கிராமம்.. அந்த கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பிரசவத்துக்காக கடந்த பிப்ரவரி மாதம் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது... ஆனால் பிரசவம் நடந்த பெண், பார்ப்பதற்கு சிறுமி போல இருக்கவும், அவருக்கு 18 வயது பூர்த்தி ஆகி இருக்குமா? என்ற சந்தேகம் அங்கிருந்த டாக்டர்களுக்கு எழுந்தது..

விசாரணை
இதனிடையே, இதுகுறித்து தேனி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினருக்கு அரசு மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்து தகவல் பறந்தது. உடனடியாக, குழந்தைகள் நலக்குழுவினர் நேரடியாகவே மருத்துவமனைக்கு சென்று விசாரணையை ஆரம்பித்தனர்.. அப்போது குழந்தை பெற்றெடுத்தது பெண்ணுக்கு, வெறும் 17 வயது தான் ஆகிறது என்பது தெரியவந்தது... இதையடுத்து, தேனி அனைத்து மகளிர் போலீசாருக்கு குழந்தைகள் நலக்குழுவினர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டனர்...

கர்ப்பம்
மற்றொருபுறம் சிறுமியிடமும் விசாரணை நடத்தினர்... 22 வயது இளைஞர் ஒருவரை தான் காதலித்ததாகவும், அவருடன் நெருங்கி பழகியதால் கர்ப்பம் ஆகிவிட்டதாகவும் சிறுமி கூறினார்.. மேலும் அந்த இளைஞர் தன்னுடைய உறவுக்காரர் என்றும் சிறுமி கூறினார்.. சிறுமியின் வாக்குமூலத்தை பெற்ற போலீசாரும், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்... இந்த வழக்கு தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது.

ஜெயில்
இதனிடையே, ஜெயிலில் இருந்த இளைஞர், சிறுமிக்கு பிறந்த குழந்தைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒருநாள் திடீரென சொன்னார்.. அந்த பெண் கர்ப்பமாவதற்கு தான் காரணமில்லை, வேறு யாராவது காரணமாக இருக்கலாம் என்றும் உறுதியாக கூறினார்... இதனால் போலீசார் குழம்பி போய், மீண்டும் புலன் விசாரணை நடத்தினர்.. அப்போதுதான், சிறுமியின் அப்பா மீது சந்தேகம் திரும்பியது..

டெஸ்ட்
அந்த அப்பாவுக்கு 45 வயது.. இவர் ஒரு கூலி தொழிலாளி.. அவரை பற்றி சிறுமியிடம் விசாரித்தபோது, திடீரென உளறி உளறி கொட்டினார் சிறுமி.. முன்னுக்குப்பின் முரணாக போலீசாரிடம் பதில் அளித்ததாகவும் தெரிகிறது.. மறுபடியும் குழம்பிப் போன போலீசார், குழந்தையின் தந்தை யார்? என்பதை கண்டறிய டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பதுதான் சரியான வழி என்று முடிவு செய்தனர்.. அதன்படி அந்த இளைஞர், சிறுமியின் அப்பா, மற்றும் பிறந்த ஆண் குழந்தை ஆகியோருக்கு டிஎன்ஏ டெஸ்ட் செய்யப்பட்டது.

டிஎன்ஏ
இதில் சிறுமியின் தந்தையின் டிஎன்ஏவும், குழந்தையின் டிஎன்ஏவும் ஒற்றுப்போனது. இதில் இளைஞரின் டிஎன்ஏ சுத்தமாக வேறுபட்டு இருந்தது... அப்போதுதான், பெற்ற மகளை அவளுடைய அப்பாவே, பாலியல் பலாத்காரம் செய்தது அம்பலமானது.. இந்த வழக்கில் சிறுமியின் அப்பாவை தேனி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இன்னொரு தகவலும் உண்டு.. மகளை நாசம் செய்த அப்பா, ஒரு சாமியாராம்.. தலையில் சடாமுடி எல்லாம் வைத்திருக்கிறார்..!
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications