உசிலம்பட்டி காவலர் முத்துக்குமார் கொலை.. 48 மணி நேரத்தில் கஞ்சா வியாபாரி என்கவுன்ட்டரில் கொலை!
தேனி: உசிலம்பட்டி காவலர் முத்துக்குமார் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த கஞ்சா வியாபாரியான பொன்வண்ணன் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார். கம்பம் வனப்பகுதியில் பொன்வண்ணன் பதுங்கியிருந்த நிலையில், போலீசார் அவரை ரவுண்ட் அப் செய்துள்ளனர். அப்போது காவலர்களை தாக்கிவிட்டு பொன்வண்ணன் தப்பிக்க முயற்சித்த போது, போலீசார் சுட்டதில் அங்கேயே இறந்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாவார்பட்டியில் 2 நாட்களுக்கு முன் டாஸ்மாக் கடை அருகே மது அருந்திய போது காவலர் முத்துக்குமார் கல்லால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். கஞ்சா வழக்கில் கைதாகி வெளியே வந்தவர்களுக்கு அறிவுரை கூறிய போது காவலரை கொலை செய்தனர். இந்த சம்பவத்தின் போது முத்துக்குமார் உடனிருந்த உறவினர் ராஜாராமும் தாக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து காயம் காரணமாக ராஜாராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதேபோல் காவலர் முத்துக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனாலும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை காவலர் முத்துக்குமாரின் உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன்பின் இன்று காலை பேச்சுவார்த்தைக்கு பின் முத்துக்குமாரின் உடலை உறவினர்கள் பெற்று கொண்டனர். இதன்பின் 21 குண்டுகள் முழங்க அவருக்கு இறுதி மரியாதை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் காவலர் முத்துக்குமார் கொலை வழக்கில் கஞ்சா வியாபாரியான பொன்வண்ணன் தேடப்பட்டு வந்தார். இவர் கம்பம் வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து கஞ்சா வியாபாரியான பொன்வண்ணனை போலீசார் ரவுண்ட் அப் செய்துள்ளனர். ஆனால் பொன்வண்ணன் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளார்.
இதனால் காவல்துறையினர் கஞ்சா வியாபாரியான பொன்வண்ணனை சுட்டதில், அங்கேயே பலியாகி இருக்கிறார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், போலீசார் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஏராளமான என்கவுன்ட்டர் செய்திருப்பது விவாதமாகி உள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications