காஷ்மீரெல்லாம் ஓரம் போ.. தேனி வந்து பாருங்க! கேரளாவில் மழை.. வேகமாக நிரம்பும் முல்லை பெரியாறு அணை..!
தேனி: கேரளாவின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 400 கன அடியிலிருந்து, 3150 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேக்கடியில் 108 மி.மீ.மற்றும் பெரியாறு அணையில் 101 மி.மீ மழை பதிவாகியுள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீரை வழங்கும் முக்கிய நீராதாரமாக இருக்கும் முல்லைப் பெரியாறு அணை தமிழக - கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.

இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. மேலும் அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வந்தது.
இந்த நிலையில் தேனி மாவட்டம் மற்றும் தேனி மாவட்டத்தை ஒட்டி உள்ள கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர் வரத்து ஒரே நாளில் எட்டு மடங்கு அதிகரித்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேக்கடியில் 108 மி.மீ மழை மற்றும் பெரியாறு அணையில் 101 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 397 கன அடி நீர்மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி அனைத்து வரும் நீரின் அளவு வினாடிக்கு 3150 கன அடியாக அதிகரித்துள்ளது.
இந்த நீர்வரத்து நேற்று வந்த அளவை எட்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், இதன் காரணமாக நேற்று காலை அணையில் நீர் மட்டம் 119.40 அடியாக இருந்த நிலையில், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடிக்கும் மேல் உயர்ந்து 120.65 அடியாக உயர்ந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 2756 மில்லியன் கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து மழை நீடித்து வருவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரித்து, அணையின் நீர்மட்டம் மேலும் என்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆரஞ்ச் அலர்ட்: தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாட்டில், பல்வேறு மாவட்டங்களில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், தென்காசி, தேனி, விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தென் மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் நீர்நிலைகள், அணிகள் நிரம்பி வருகின்றனர். குறிப்பாக நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications