Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்கிட்ட நாட்டை தாங்க.. வெறும் அரை மணி நேரத்தில் மணிப்பூர் கலவரத்தை நிறுத்துகிறேன்.. சீமான் நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil

தேனி: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து வன்முறை நடந்து வரும் நிலையில் ‛‛நாட்டை என்னிடம் கொடுத்தால் வெறும் அரை மணிநேரத்தில் வன்முறையை நிறுத்தி காட்டுவேன்'' என சீமான் தெரிவித்தார். மேலும் மணிப்பூர் வன்முறையின் பின்னணியில் ரகசியம் ஒழிந்திருப்பதாக கூறி முக்கிய விஷயம் ஒன்றையும் தெரிவித்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, பெரியக்குளம், போட்டி, கம்பம் சட்டசபை தொகுதிகளில் கட்சியின் உள்கட்டமைப்பை சீமான் மறுசீராய்வு செய்தார்.

If you give the nation, I will stop Manipur violence in just half an hour, says Seeman

அதன்பிறகு மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடி, எதிர்வரும் தேர்தல்களை சந்திப்பதற்கு தயாராவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார். இந்த வேளையில் சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் மணிப்பூர் கலவரம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். இதுகுறித்து சீமான் கூறியதாவது:

மணிப்பூர் கலவரம் என்பது பிரதமர், அம்மாநில முதல்வருக்கு தெரியாமல் இல்லை. நேற்று காஷ்மீரில் என்ன நடந்ததோ, அதற்கு முன்பு என் ஈழத்தில் என்ன நடந்ததோ அதுதான் இன்று மணிப்பூரில் நடந்துள்ளது. இலங்கையில் சிங்களனை வைத்து அடித்து விரட்டினார்கள். காஷ்மீரில் ராணுவத்தை வைத்து மக்களை அடித்து விரட்டினார்கள். இப்போது மணிப்பூரிலும் அதேதான் நடக்கிறது.

மணிப்பூர் மாநில பிரச்சனை என்பது பழங்குடியின மக்களை வெளியேற்றுவதை அடிப்படையாக கொண்டுள்ளது. காடுகளில் வாழும் பழங்குடியின மக்களை வெளியேற்றிவிட்டு கனிமவளங்களை எடுக்க வேண்டும் என்பது தான் நோக்கம். தற்போது பழங்குடியின மக்கள் கிறிஸ்தவர்களாக உள்ளனர். மைத்தேயி மக்கள் உயர்ஜாதி இந்துக்களாக உள்ளனர். பழங்குடியினர் காடுகளில் உள்ளனர். மைத்தேயி மக்கள் பாஜக ஓட்டுகளாக கீழ்பகுதியில் உள்ளனர்.

இதனால் இருவருக்கும் மோதலை உருவாக்கி பழங்குடியினர்களை வெளியேற்றி இயற்கை வளத்தை சுரண்ட உள்ளனர். இப்போது லட்சக்கணக்கணக்கானவர்களை வெளியேற்றி விட்டனர். நீங்க என்கிட்ட நாட்டை நாட்டை அரைமணிநேரத்தில் கலவரத்தை நிறுத்துறேன்.. முடியுமா? முடியாதா?. சாதாரண குழந்தைகளிடம் கேட்டால் கூட இது அரசியல் என்பது தெரியும்'' என தெரிவித்தார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் அதிகளவில் பழங்குடியின மக்கள் வசக்கின்றனர். இங்கு பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார்.

இங்கு குக்கி இனத்தை சேர்ந்தவர்கள் பழங்குடியினர் பிரிவில் உள்ளனர். இத்தகைய சூழலில் தான் தங்களை பழங்குடி இனத்தில் சேர்க்க மைத்தேயி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு குக்கி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இரு இனக்குழுக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கடந்த மே மாதம் 3ம் தேதி வன்முறை வெடித்தது. தற்போது 2 மாதங்களாக அங்கு வன்முறை தொடர்ர்ந்து வருவதோடு 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் மணிப்பூரை விட்டு வெளியேறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+