ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல்.. அதிமுக வெற்றி பெற ஜெ.வின் ஆன்மா உதவும்- அமைச்சர் பேச்சு
ஆண்டிப்பட்டி: ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற ஜெயலலிதாவின் ஆன்மா உதவி செய்யும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
ஆண்டிப்பட்டி எம்எல்ஏவாக இருந்த தங்கதமிழ்ச்செல்வன், சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இவர் மட்டுமல்லாது இன்னொரு 17 பேரும் தகுதி நீக்க்ம செய்யப்பட்டனர். இதையடுத்து நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
எனினும் இரு நீதிபதிகள் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்துவிட்டனர். மேலும் 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவதற்காக விதிக்கப்பட்ட தடையையும் அவர்கள் நீக்கினர். இதனால் அவர்களின் தகுதி நீக்கம் உறுதியானது. இதைத் தொடர்ந்து 18 தொகுதிகளும் காலியாக அறிவிக்கப்பட்டது.

அமமுக
18 தொகுதிகளுக்கும் உறுப்பினர்கள் காலமான இரு தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் அறிவிக்கப்படவுள்ளன. இந்த தேர்தலில் வெற்றி பெற அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்டவை கடும் போட்டியில் உள்ளனர்.

ஆன்மா
இந்நிலையில் ஆண்டிப்பட்டி தொகுதி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். அவர் கூறுகையில் ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிமுக வெற்றிபெற ஜெயலலிதாவின் ஆன்மா உதவி செய்யும்.

கிண்டல்
தங்கத்தமிழ்ச்செல்வன் நாளை எங்கே இருப்பார் என்று யாருக்கும் தெரியாது என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

நியாயம்
அதாவது சொந்த தொகுதியான ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வராத ஜெயலலிதாவின் ஆன்மா இந்த தேர்தலுக்கு மட்டும் எப்படி வரும் என அமைச்சரை கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். அதுவும் நியாயம்தானே என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications