சொந்த மாவட்டத்திலேயே ஓபிஸ்-க்கு கிடைத்த ஷாக்.. தேனியில் சகோதரர் சண்முக சுந்தரம் அணி தோல்வி
தேனி: தேனி மாவட்ட திட்டக்குழு தேர்தலில் திமுகவை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ சண்முக சுந்தரம் அணி தோல்வி அடைந்துள்ளது.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமியுடன் ஓ பன்னீர் செல்வத்துக்கு மோதல் ஏற்பட்டது. இதனால், அதிமுகவில் இருந்து ஓ பன்னீர் செல்வத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிரடியாக நீக்கியது. கட்சியும் முழுமையாக எடப்பாடி பழனிசாமி வசம் சென்றது. அதிமுகவில் இருந்து ஓ பன்னீர் செல்வம் நீக்கப்பட்டு விட்டதாகவும் இனி எக்காலத்திலும் அவரை கட்சியில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு இல்லை என்று அதிமுக தரப்பு கூறி வருகிறது.

எனினும், சட்ட போராட்டங்களை ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்து நடத்தி வருகிறது. பொதுக்குழுவை எதிர்த்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. அதோடு தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளது. ஓபிஎஸ்-க்கு அடுத்தடுத்த பின்னடைவு ஏற்பட்டாலும் தற்போது அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த தீர்ப்பு தங்களுக்கே சாதகமாக வரும் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இது ஒருபக்கம் இருக்க டிடிவி தினகரனுடன் கூட்டணி அமைத்து செயல்படுவேன் என தனியாக ஒரு பாதையையும் ஓபிஎஸ் தொடங்கியிருக்கிறார். இதனிடையே, தேனி மாவட்ட திட்டகுழு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட ஓ பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ சண்முகசுந்தரம் தலைமையிலான அணி தோல்வி அடைந்துள்ளது.
தேனி மாவட்ட திட்டக்குழுவிற்கு 12 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டியிருந்து. இதில் 5 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகினர். மீதமுள்ள 7 உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. திமுக சார்பில் ஒரு அணியும் ஓபிஎஸ் சகோதரரும் பெரிய குளம் நகராட்சி கவுன்சிலருமான ஓ சண்முகசுந்தரம் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன.
இந்த தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் வாக்களித்தனர். தேர்தல் முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், திமுக சார்பில் போட்டியிட்ட 7 பேரும் வெற்றி பெற்றனர். ஓ பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ சண்முகசுந்தரம் உள்பட அவரது அணி தோல்வி அடைந்தது. முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் அவரது சொந்த மாவட்டத்தில் தோல்வி அடைந்து இருப்பது அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
-
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன











Click it and Unblock the Notifications