நாம் அனைவரும் முதலில் இந்து... பேசியது யார் தெரியுமா...!
தேனி: ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்தரநாத் எம்.பி. ''நாம் அனைவரும் முதலில் இந்து.. அப்புறம் தான் மற்றதெல்லாம்..'' எனப் பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
தேனி மாவட்டம் சின்னமனூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மக்களவை உறுப்பினர் ரவீந்தரநாத் குமார், இந்தியாவின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும், நாம் அனைவரும் முதலில் இந்து..பிறகு தான் மற்றது எனக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கடந்த ஆண்டும் தாம் தான் சின்னமனூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை தொடங்கி வைத்ததாகவும், இந்த ஆண்டும் எம்.பி.யாகிய நிலையிலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதாகவும் சுயபுராணம் பாடினார்.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த இந்து முன்னணி அமைப்பினருக்கு ரவீந்தரநாத்தின் பேச்சு மகிழ்ச்சியை அளித்தது. அதேநேரம் அங்கிருந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாழ்க்கையில் இருக்கும் ஒருவர், அதுவும் துணை முதலமைச்சர் மகன், தேனி தொகுதியின் மக்கள் பிரதிநிதி என பொறுப்பான பதவியில் இருக்கும் ஓ.பி.ரவீந்தரநாத் இப்படி பேசியது அதிமுகவில் உள்ள இஸ்லாமியர்கள் மத்தியிலேயே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. தேனி மாவட்ட அதிமுக செயலாளராக இருப்பது சையது கான் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.பி.என்ற முறையில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டதால் கூட்டத்தில் கலந்துகொண்டதெல்லாம் சரி, ஆனால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவாக பேசியிருக்க வேண்டும் என்கிறார் அதிமுக சீனியர் நிர்வாகி ஒருவர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications