வராஹா நதிக்கரையோரம்... இளைஞர்களை ஈர்க்க ஓ.பி.எஸ். மகன் முன்னெடுக்கும் மெகா பிளான்..!
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள வராஹா நதியை தூய்மைப்படுத்தும் முயற்சியாக ''வராஹா நதியை பாதுகாப்போம்'' என்ற பெயரில் இயக்கம் தொடங்கியிருக்கிறார் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்தரநாத்.
முழுக்க முழுக்க இளைஞர்களை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த வராஹா நதி பாதுகாப்பு இயக்கம் மூலம் தனக்கான பிராண்டிங் பணிகளையும் கணக்கச்சிதமாக செய்து வருகிறார் ஓ.பி.ரவீந்தரநாத் எம்.பி.
இதனிடையே கடந்த செப்டம்பர் 9-ம் தேதி வராஹா நதி தூய்மைப்படுத்தும் பணி தொடங்கப்பட்ட நிலையில் அது முடிவடையும் தருவாயை எட்டியுள்ளது.

பெரியகுளம்
தேனி மாவட்டம் பெரியகுளத்தின் அடையாளங்களில் ஒன்று வராஹா நதி. இந்த நதியை பொறுத்தவரை புனித நதியாக கருதி அதில் இருந்து தீர்த்தங்கள் எடுத்துச்செல்லப்பட்ட காலம் மறைந்து இப்போது ஓடையை போல் அது காட்சியளிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் தண்ணீர் தலச்சி ஆறு, பேரிஜம் ஆறு ஆகியவைகள் மூலம் ஒருங்கிணைந்து வராஹா நதியாக ஓடிக்கொண்டிருந்தது.

ஆறு கண்காணிப்பாளர்
வராஹா நதிக்கரையை கண்காணிக்க 'ரிவர் வாட்சர்' என்ற ஆறு கண்காணிப்பாளர் பணியிடங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருந்துள்ளன. அவர்கள் வராஹா நதிக்கரையில் இரு புறமும் தினமும் ஆய்வு நடத்தி குப்பைகளை கொட்டுபவர்களுக்கும், அசுத்தம் செய்பவர்களுக்கும் அபராதங்கள் விதித்து வந்துள்ளனர். ஆனால் நாளடைவில் அந்தப் பணியிடங்கள் அகற்றப்பட்டதால் வராஹா நதி கூவம் நதியை போல் மாறத்தொடங்கியது.

சேவ் வராஹா
இந்நிலையில் தேனி மக்களவை தொகுதி உறுப்பினரும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி.ரவீந்தரநாத் வராஹா நதி பாதுகாப்பு இயக்கம் (சேவ் வராஹா) தொடங்கி தன்னை ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலராக காட்டியிருக்கிறார். இதன் மூலம் கட்சிக்கு அப்பாற்பட்ட இளைஞர்களையும், இயற்கை ஆர்வலர்களையும் தன் பக்கம் இழுப்பதற்கான மெகா பிளானோடு இந்த இயக்கத்தை அவர் முன்னெடுத்து வருகிறார்.

80 % நிறைவு
தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்தரநாத் முயற்சியில் வராஹா நதி புதுப்பொலிவு பெற்று வருவதை யாரும் மறுக்க முடியாது. கூவம் போல் காட்சியளித்த வராஹா நதி இப்போது தெளிந்த நீரோடையாக மாறி வருகிறது. கடந்த 9-ம் தேதி வராஹா நதி தூய்மைப்படுத்தும் பணிகள் தொடங்கிய நிலையில் தற்போதைய நிலவரப்படி 80% பணிகள் நிறைவடைந்துள்ளது. விரைவில் எஞ்சிய பணிகளும் நிறைவடைந்தால் பழைய வராஹா நதியாக பெரியகுளம் வாசிகள் அதனைக் காணலாம்.

இயற்கை எழில்
பொதுவாகவே தேனி மாவட்டத்தை பொறுத்தவரை இயற்கை எழில் கொஞ்சும் அற்புதமான இடங்கள் பல உள்ளன. வராஹா நதியை போல் இன்னும் ஒரு சில சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளை முன்னெடுக்க உள்ள ரவீந்தரநாத் எம்.பி., அந்தப் பணிகளில் கட்சிக்கு அப்பாற்பட்ட தன்னார்வலர்களை தன்னுடன் இணைத்து செயல்படும் திட்டத்தில் இருக்கிறார்.
-
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்?












Click it and Unblock the Notifications