தேனி கழிவறைகளில் என்ன நடக்குது.. உள்ளே பார்த்து ஆடிப்போன பொதுமக்கள்.. போலீசுக்கே ட்விஸ்ட்
தேனி: தேனி மாநகரில் ஏராளமான மதுக்கடைகளும், மதுபான பார்களும், மகளிர் மன்றங்கள் என்ற பெயரில் தனியார் பார்களும் செயல்பட்டு வருகின்றன. எங்கு பார்த்தாலும் மதுக்கடைகளும், பார்களும் இருக்கிறது. இதுதவிர பல்வேறு மலை அடிவாரப்பகுதிகளை திறந்தவெளி பார் ஆகவும் பயன்படுத்துகிறார்கள். இது போதாது என்று கழிவறைகளுமே இப்போது பார் ஆக மாறி உள்ளது. கழிவறைகளில் மதுபானங்கள் விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்,
தேனி மாவட்டம் என்பது மேற்கு தொடர்ச்சி மலையால் சூழப்பட்ட அற்புதமான இயற்கை பூமியாகும்.தேனி, பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிப்ட்டி என எந்த ஊரிலும் இருந்து சில நிமிடங்களில் மேற்கு தொடர்ச்சிமலைக்குள் போய்விட முடியும். அதுமட்டுமல்ல மேகலை, குரங்கணி, டாப் ஸ்டேஷன், போன்ற சுற்றுலா தலங்களையும், கொடைக்கானல், மூணாறு, தேக்கடி, கொழுக்குமலை போன்ற பல்வேறு மலைவாசல் தலங்களை எல்லையாக கொண்டுள்ளது. இதனால் பல சுற்றுலா பயணிகள் தேனி வழியாக செல்கிறார்கள்.

இங்கு ஏராளமான மதுக்கடைகள் மற்றும் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் தனியார் மதுக்கடைகள் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளன. இந்த மதுக்கடைகளை தாண்டி சில பகுதிகளில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்யப்படுகிறது. அவர்கள் மீது போலீசார் அடிக்கடி கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும் டாஸ்மாக்கில் மதுபானங்களை வாங்கி விற்கும் தொழில் அதிக லாபம் கிடைப்பதால் , இதனை பலர் செய்கிறார்கள்.. என்ன தான் வழக்கு பதிவு செய்தாலும், இந்த குற்றத்தை செய்பவர்கள் மீண்டும் மீண்டும் செய்வதாக கூறப்படுகிறது.
இது ஒருபுறம் எனில், தேனி நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சில கட்டண கழிவறைகளை மதுவிற்பனை செய்யும் இடமாக சிலர் பயன்படுத்தி வருவதை கடந்த காலங்களில் காண முடிந்தது. தேனி பங்களாமேடு, பழைய பஸ் நிலையம் அருகில் உள்ளிட்ட இடங்களில் இதுபோன்று கழிவறைகள் அருகில் மதுவிற்பனை செய்திருக்கிறார்கள். அவர்கள் மீது போலீசார் வழக்குபதிவும் செய்திருக்கிறார்கள்,
அந்த வகையில் தேனி பங்களாமேடு கட்டணக் கழிவறை அருகில் மதுவிற்பனை செய்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த வாலிபர் அண்மையில் கைது செய்யப்பட்டார். இதுபோல் சில கழிவறைகளில் மதுபானங்களோடு, மிக்சர், ஊறுகாய் போன்ற பொருட்களும் விற்பனை செய்யப்படுவாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இப்படி கழிவறைகளில் மதுபானங்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை திறந்த வெளி பாராக பயன்படுத்துவதையும் தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications