நிரம்பிய வைகை அணை.. மதுரை, திண்டுக்கல் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு.. விவசாயிகள் மகிழ்ச்சி
தேனி: தொடர் கனமழையால் வைகை அணை முழுக்கொள்ளவை எட்டியுள்ளது.வைகை அணை நிரம்பியதை மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக பெரியார் பிரதான கால்வாயில் இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தேனி மாவட்டத்திலுள்ள வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் விவசாய தேவையையும் மதுரை, தேனி மாவட்டங்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் இருபோக நிலங்களின் முதல் போக சாகுபடிக்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

தென்மேற்கு பருவமழை சரியான அளவில் பெய்யவில்லை. முல்லை பெரியாறு அணை மற்றும் வைகை அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு நீர் வரத்து இல்லாதலும், பருவ மழை பொய்த்ததினாலும் தண்ணீர் திறக்கப்படவில்லை. வடகிழக்குப் பருவமழை கடந்த சில வாரங்களாக பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து வெகுவாய் அதிகரித்து 70 அடியாக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர், பேரணை, கள்ளந்திரி பகுதி பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. விநாடிக்கு 900 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அமைச்சர் ஐ. பெரியசாமி, அமைச்சர் மூர்த்தி ஆகியோர் வைகை அணையை திறந்து வைத்து பாய்ந்தோடிய நீரில் மலர்களை தூவினர்.
வைகை அணையைப் பொறுத்தளவில் 6 ஆயிரத்து 91 மில்லியன் கனஅடி நீரை தேக்க முடியும். தற்போது 5 ஆயிரத்து 890 மில்லியன் கனஅடி நீர் தேங்கி உள்ளது. இதனால் 15 சதுர கி.மீ. அளவுக்கு கடல்போல் பரந்து விரிந்து தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது.
இதன் காரணமாக இன்று வைகை அணையில் இருந்து திண்டுக்கல் மதுரை மாவட்டங்களிலுள்ள இரு போக சாகுபடி நிலங்களின் முதல் போக பாசனத் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று திறந்து விடப்பட்ட நீரின் மூலம் மதுரை மாவட்டம் வடக்கு வட்டத்திலுள்ள 26792 ஏக்கர் மற்றும் வாடிபட்டி வட்டத்திலுள்ள 16452 ஏக்கரும், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 1797 ஏக்கர் நிலங்களும் என மொத்திம் 45041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
வைகை அணையில் இருந்து இன்று முதல் 45 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 900 கன அடி வீதம் திறக்கப்படும், அதன் பிறகு 75 நாட்களுக்கு முறை பாசனம் என மொத்தம் 120 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நீர் நிலைகள் நிரம்பி விவசாயம் செழிப்படையும் என மதுரை,திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications