முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.50000.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கலெக்டர் விளக்கம்
தேனி: முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தொழிற்கல்வி பயில்வதற்காக நிதி உதவி வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஏழை மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் படிப்பினைத் தொடர ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக அரசு ஏழை மாணவர்கள் கல்வி பயில்வதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வி உதவி தொகை வழங்குவது, இலவச வேலைவாய்ப்பு பயிற்சி அளிப்பது, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கட்டணத்தில் விலக்கு அளிப்பது உள்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதேபோல் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் தொழிற்கல்வி பயிலவும் உதவி தொகை அளித்து வருகிறது.. குறிப்பாக இன்ஜினியரிங் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சட்டக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தொழிற்கல்வி பயில்வதற்காக நிதி உதவி வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மிகவும் ஏழ்மையான நிலையில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சட்டக் கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் படிப்பினைத் தொடர ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற மாணவ, மாணவிகள் அரசின் ஒற்றைச் சாளர முறையின் வழியாக சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறும் மாணவ, மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற இயலாது. தமிழ்நாட்டில் இருப்பிடச்சான்று பெற்றவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்தகைய தகுதியுள்ளவர்கள் அந்தந்த தாலுகாவுக்கு உட்பட்ட தாசில்தாரை அணுகி உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஒற்றைச் சாளர முறையில் சேர்க்கை பெற்றதற்கான ஒதுக்கீடு சான்று, கல்லூரியில் பயிலும் சான்று, இருப்பிடச் சான்று, பிறப்பிடச் சான்று, வருமானச் சான்று, ஆதார் அட்டை நகல், குடும்ப உறுப்பினர் சான்று ஆகியவை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்" இவ்வாறு தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications