தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டி ஏன்? ஓபனாக உண்மையை உடைத்த ஓ பன்னீர்செல்வம்

Subscribe to Oneindia Tamil

தேனி: லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட களம் இறங்க உள்ளார் என ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தனது விருப்பத்தின் பேரிலேயே டிடிவி தினகரன் தேனியில் போட்டியிடுகிறார் என்றும் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தேனி லோக்சபா தொகுதியில் ஓ பன்னீர்செல்வம் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிடிவி தினகரன் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. ஓ பன்னீர்செல்வம் தரப்புக்கும், டிடிவி தினகரன் தரப்புக்கும் கணிசமான ஆதரவு தேனியில் இருப்பதுடன், முக்குலத்தோர் வாக்குகளே வெற்றியாளர்களை தீர்மானிப்பதில் இந்த தொகுதி முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் டிடிவி தினகரன் களம் இறங்குகிறார்.

Why TTV Dhinakaran contest in Theni constituency O Panneerselvam who broke the truth openly

தேனி லோக்சபா தொகுதி என்பது பல காலமாகவே அதிமுகவின் கோட்டையாக இருக்கும் தொகுதியாகும். இங்கு கடைசியாக 1996ம் ஆண்டு தான். திமுக நேரடியாக போட்டியிட்டு வெற்றி பெற்றது . அதற்கு முன்பு 1980ல் மட்டுமே திமுக வென்றது. இதனால் திமுக இந்த தொகுதியை எப்போதுமே கூட்டணிக்கு தந்துவிடும் வழக்கத்தை வைத்திருக்கிறது.. குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்குத்தான் தந்துவிடும்.. காங்கிரஸ் கட்சி தான் இங்கு 2004, 2009ம் ஆண்டு வெற்றி பெற்றது. 2014, 2019களில் நடந்த தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெற்றுள்ளது.

தேனி லோக்சபா தொகுதியை பொறுத்தவரை வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக முக்குலத்தோர் வாக்குகள் முதல் இடத்தில் உள்ளது.. இரண்டாவது இடத்தில் தலித்துகள் இருக்கிறார்கள். இதேபோல் நாயுடு, கவுண்டர், செட்டியார், பிள்ளைமார், இஸ்லாமியர்கள் கணிசமாக வாழ்கிறார்கள். தேனி தொகுதியில் பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கம்பம், போடி, உசிலம்பட்டி, சோழவந்தான் என ஆறு தொகுதிகள் உள்ளன. இதில் பெரியகுளமும், சோழவந்தான் தொகுதியும் தனி தொகுதிகள் ஆகும்.

சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை பெரியகுளம் தொகுதியில் தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்கள அதிகமாக இருக்கிறார்கள். கம்பம் தொகுதியில் கவுண்டர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கிறார்கள். உசிலம்பட்டி, சோழவந்தான், போடி மற்றும் ஆண்டிப்பட்டியில் முக்குலத்தோர், நாயுடு மற்றும் தலித்துகள் அதிகமாக இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக பார்த்தால் தேனி லோக்சபா தொகுதியில் முக்குலத்தோர் ஓட்டுகள் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.

டிடிவி போட்டியிட்டால் வெல்வது எளிதல்ல.. தேனியில் அதிமுகவிற்கு பெரிய சிக்கல்.. யார் இந்த நாராயணசாமி?


இந்நிலையில் 1999ம் ஆண்டு நடந்த தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அப்போது ஏற்பட்ட நெருக்கத்தில் தான், பெரியகுளம் நகராட்சி தலைவராக இருந்த ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் மிகப்பெரிய உயரம் தொட்டார். முதல்வர் என்கிற அளவிற்கு ஓ பன்னீர்செல்வம் வளரவதற்கு டிடிவி தினகரனும், சசிகலாவுமே முக்கிய காரணம் ஆகும.

தேனி தொகுதியை பொறுத்தவரை தேனியில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு ஓரளவு செல்வாக்கு இருக்கிறது. இதேபோல் ஓ பன்னீர்செல்வத்திற்கு போடி மற்றும் பெரியகுளம் பகுதியில் கணிசமான ஆதரவு உள்ளது. இந்நிலையில் தற்போது டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே கூட்டணியில் இருக்கிறார்கள். அதுவும் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் ஆதரவு உள்ளதால் டிடிவி தினகரனுக்கு பிளஸ் ஆக பார்க்கப்படுகிறது.

டிடிவி தினகரன் களம் இறங்குவார் என்பதை உணர்ந்து தான், காங்கிரஸ் கட்சிக்கு திமுக இந்த தொகுதியை தரவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, டிடிவி தினகரனின் சிஷ்யரான தங்கத்தமிழ்செல்வனை களம் இறக்கி இருக்கிறது. அதிமுகவில் நாராயணசாமி என்பவர் தேனி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுவதால் திமுக மற்றும் அதிமுக கடும் சவாலை சந்திக்கும் என்று சொல்கிறார்கள். அதேநேரம் டிடிவி தினகரனுக்கு ஏன் தேனி தொகுதியை ஓ பன்னீர்செல்வம் விட்டுக்கொடுத்தார் என்ற கேள்வி எழாமல் இல்லை.. ஏனெனில் கடந்த முறை அவ்வளவு பிரச்சனைக்கு நடுவிலும் மகனை வெற்றி பெற வைத்தார் ஓ பன்னீர்செல்வம்... இந்த முறை தானும் போட்டியிடாமல் டிடிவி தினகரனுக்கு விட்டுக்கொடுக்க காரணம் என்ன என்பது பலருக்கும் கேள்வி உள்ளது. இதுபற்றி ஓ பன்னீர்செல்வமே விளக்கம் அளித்துள்ளார்.


லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் அமமுகவிற்கு தேனி மற்றும் திருச்சி கொடுக்கப்பட்ட நிலையில், தேனியில் டிடிவி தினகரனே களம் இறங்க உள்ளாராம். இதனை ஓ பன்னீர்செல்வம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் தனது விருப்பத்தின் பேரிலேயே டிடிவி தினகரன் தேனியில் போட்டியிடுவதாகவும் கூறினார். ஓ பன்னீர்செல்வம் ஒரு காலத்தில் டிடிவி தினகரனையும் சசிகலாவையும் அதிமுகவில் வெளியேற்ற வேண்டும் என்று கூறிவந்த நிலையில், இன்று அவரே டிடிவி தினகரனை தேனியில் போட்டியிட அறிவுறுத்தி இருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பாஜக கூட்டணியில் ஓ பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+