அம்பாசமுத்திரத்தில் பல் பிடுங்கிய வழக்கு.. ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்பட 15 போலீசாருக்கு ஜாமீன்
நெல்லை: விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்பட 15 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு ஜாமீனும் நீதிமன்றம் அளித்தது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக இருந்தவர் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங். ஹரியானாவை சேர்ந்த இவர் 2020-ல் பணிக்கு சேர்ந்தார். கடந்த ஆண்டு முதல் அம்பாசமுத்திரத்தில் பணி செய்து வந்தார். இவர் மீது நெல்லை மாவட்டம் அம்பை காவல் உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தமிழ்நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதைத்தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பல்வீர்சிங் உள்ளிட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் உள்ளிட்ட 15 போலீசார் மீது 4 வழக்குகள் பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளின் குற்றப்பத்திரிகையை அண்மையில் நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர். இந்த நிலையில்,விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங், இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி உள்ளிட்ட 15 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டது.
இதன்படி, இன்று காலை ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங், இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆபிரகாம் ஜோஸ், பல்வீர்சிங்கின் தனி பாதுகாவலர்கள் சதாம் உசேன், இசக்கிராஜா, கார் டிரைவர் விவேக் என வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 போலீசாரும் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜராகினர். தொடர்ந்து பல்வீர்சிங் உள்ளிட்ட 15 பேரும் ஜாமீன் கோரி மாஜிஸ்திரேட் முன்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் உள்ளிட்ட 15 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதற்கிடையே, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் உள்ளிட்ட 15 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. இதனை எதிர்த்து அந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். மேலும் இந்த வழக்கு விசாரணையை வெளிமாநிலத்துக்கு மாற்றக்கோரியும் மனு தாக்கல் செய்ய உள்ளோம்" என்றனர்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications