"இதுவே முதல்முறை" பாஞ்சாங்குளம் தீண்டாமை விவகாரம்.. குற்றவாளிகள் 6 மாதம் ஊருக்குள் நுழைய தடை!
நெல்லை: பாஞ்சாங்குளம் தீண்டாமை வழக்கின் குற்றவாளிகள் அனைவரும் 6 மாதத்திற்கு ஊருக்குள் வருவதற்கு தடை விதித்து நெல்லை மாவட்ட நீதிபதி பத்மநாபன் உத்தரவிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாங்குளத்தில் உள்ள கடைக்கு வந்த பள்ளிக் குழந்தைகளிடம் கடைக்காரர், "இனிமேல் நீங்கள் யாரும் இங்கு வந்து தின்பண்டம் வாங்க வேண்டாம். பள்ளிக்கூடத்திற்கு செல்லுங்கள். இனி தின்பண்டம் உள்ளுர் கடையில் வாங்கக் கூடாது. தின்பண்டம் கொடுக்க முடியது என்று சொல்கிறார்கள் என வீட்டிலும் சொல்லுங்கள். இனி கொடுக்க மாட்டோம். ஊரில் கட்டுப்பாடு வந்துள்ளது" என்று சொல்கிறார்.

ஊர்க் கட்டுப்பாடு
இதனை கேட்ட அந்த பிஞ்சு குழந்தை, என்னக் கட்டுப்பாடு என்று கேட்கிறது. அதற்கு கடைக்காரர் உடனே, "கட்டுப்பாடு என்றால் ஊரில் ஒரு கூட்டம் போட்டு பேசி இருக்கிறார்கள். உங்கத் தெருவில் யாருக்கும் பொருள்கள் கொடுக்கக் கூடாது" என்று கூறி அந்தக் குழந்தைகளை கடைக்காரர் திருப்பி அனுப்புகிறார். இதுதொடர்பான காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

5 பேர் மீது வழக்கு
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 5 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடையின் உரிமையாளரும், ஊர் நாட்டாமை என கூறப்படும் மகேஷ்வரன் மற்றும் ராமச்சந்திர மூர்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து குமார், சுதா, முருகன் ஆகிய 3 பேரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் கோவையில் இருந்த குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர். மீதமுள்ள இருவரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

சிறப்புப் பிரிவின் கீழ் வழக்கு
இந்த நிலையில் தீண்டாமை விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், சிறப்பு பிரிவாக சாதிய பாகுபாட்டில் ஈடுபட்ட நபர்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கும் வகையில் சிறப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதுவே முதல்முறை
அப்போது பாஞ்சாங்குளம் தீண்டாமை குற்றவாளிகள் 5 பேரும் 6 மாதம் கிராமத்திற்குள் நுழைய தடை விதித்து நீதிபதி பத்மநாபன் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் முதல் முறையாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளை ஊருக்குள் நுழைய தடை விதிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications