வெறிச்சோடும் அருவிகள்.. அடியோடு குறைந்து போன சுற்றுலாப் பயணிகள்.. காலி செய்யும் வியாபாரிகள்
Recommended Video

குற்றாலம்: குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டதாலும், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை நின்று விட்டதாலும் அருவிப் பக்கம் போடப்பட்ட கடைகளை வியாபாரிகள் காலி செய்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

நீர் வரத்து குறைந்து விட்டாலும் சீசன் முடிந்து விட்டாலும் கூட ஓரளவு சுற்றுலாப் பயணிகள் வருகை இருக்கத்தான் செய்கிறது. குறைந்தளவே விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.
குற்றாலம் மெயினருவியில் முற்றிலுமாக நீர்வரத்து வறண்டு விட்டதால் இன்னும் சில நாட்களில் நீர்வரத்து முற்றிலுமாக நின்று விடும் நிலையை எட்டியுள்ளது. மேலும் சபரிமலை சீசன் காலத்தில் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் குளிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்டு வந்து செல்லும் பக்தர்கள் கூட்டம் சபரிமலை ஐயப்ப சீசன் முடிந்து விட்டதாலும் இனி அடுத்த ஜூன் மாதம் தான் சீசன் தொடங்கும்.

இதன் காரணமாக இங்கு ஏலம் எடுத்து கடைகள் போட்ட வியாபாரிகள் கடைகளை காலி செய்து வருகின்றனர். மொத்தத்தில் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் மழையில்லாததால் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து விட்டது. இன்னும் சில நாட்களில் நீர்வரத்து நின்று விடும் நிலை உள்ளது. குற்றாலம் வெறிச்சோட ஆரம்பித்துள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications