ஆட்டோ டிரைவருடன் மகள் காதல்! ஆதரித்த அம்மா - வெட்டி சாய்த்த தந்தை
ஆட்டோ டிரைவரை காதலித்த மகளை வெட்டிய அப்பா, அதை தடுக்க வந்த மனைவியையும் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் சங்கரன் கோவில் அருகே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி: சாதி மாறி காதலித்த மகளை ஆணவக்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. ஆட்டோ டிரைவரை காதலித்த மகளை கண்டித்த தந்தை, காதலுக்கு ஆதரவாக இருந்த மனைவியையும் வெட்டி சாய்த்த செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகேயுள்ள நெற்கட்டும் சேவலில் இந்த பதைபதைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. குடிபோதையில் நடந்த கொலை என்று கூறப்பட்ட நிலையில் காதலுக்காக நடந்த கொலை என்று தகவல் வெளியாகியுள்ளது.
நெற்கட்டும் சேவலில் பிறந்த சமுத்திரபாண்டியனுக்கு வெள்ளைத்துரச்சி என்ற மனைவியும் சிவரஞ்சனி என்ற மகளும் உள்ளனர். பெங்களூருவில் வேலை செய்து வந்த சமுத்திரபாண்டியன் சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். மகள் சிவரஞ்சனி பிளஸ் டூ முடித்துள்ளார்.

உறவினரான ஆட்டோ டிரைவரை காதலித்து வந்துள்ளார் சிவரஞ்சனி.
மகளின் காதலை கண்டித்துள்ளார் சமுத்திரபாண்டியன் ஆனால் அவர் கேட்கவில்லை. தனது காதலருடன் தனிமையில் சந்தித்து பேசியுள்ளார். மகளின் காதலுக்கு வெள்ளைத்துரச்சி ஆதரவு தெரிவித்துள்ளார். பெரிய இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொடுக்க நினைத்தார் சமுத்தரபாண்டியன். ஆனால் வீட்டில் யாரும் கேட்பதாக இல்லை.
செவ்வாய்கிழமை வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த சமுத்திரபாண்டியன், மனைவி, மகளிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றி அடிதடியில் முடிந்தது. ஆத்திரமடைந்த சமுத்திரபாண்யன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவியை வெட்டினார் இதில் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். மகளையும் விடாமல் வெட்டினார் இதில் காயமடைந்த சிவரஞ்சனியை சங்கரன்கோவில் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மிகவும் கவலைகிடமாக முறையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆத்திரத்தில் கொலை செய்த சமுத்திரபாண்டியன் நேராக கையில் அரிவாளுடன் புளியங்குடி காவல்நிலையத்தில் போய் சரணடைந்தார்.












Click it and Unblock the Notifications