திரும்பவும் சொல்றேன்.. கொலைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.. அந்த 2பேரை பிடிங்க.. சீனியம்மாள் ஆவேசம்
திமுக பெண் நிர்வாகி சீனியம்மாள் ஆவேசமாக பேட்டி தந்துள்ளார்
Recommended Video
நெல்லை: "என் மகன் எங்கே.. போலீசார் எங்கே வெச்சிருக்காங்கன்னே தெரியலை.. இது எல்லாத்துக்கும் காரணம் அந்த 2 பேர்தான்" என்று திமுக பெண் நிர்வாகி சீனியம்மாள் குற்றம் சாட்டி உள்ளார்
முன்னாள் மேயர் உமாமகேசுவரி கொலை வழக்கில் திமுக பெண் நிர்வாகி சீனியம்மாளுக்கு தொடர்பு இருக்கும் என்று ஒரு சந்தேகம் எழுந்தது.
அதனால் நெல்லை போலீசார் மதுரைக்கே சென்று 2 முறை விசாரணை நடத்தினர். அதற்கு சீனியம்மாள் சொன்னதாவது:

அவசியம் இல்லை
"எனக்கு உடம்பு சரியில்லை, கூடல்நகரில் இருக்கிற என் மகள் வீட்டுக்கு நான் வந்திருக்கிறேன். வந்த இடத்தில் நான் எப்படி இப்படியெல்லாம் செய்ய முடியும்? உமா மகேஸ்வரி மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர், நான் மாநில துணை செயலாளர்.. அவருகிட்ட போய் நான் நிக்கணும்னு எனக்கு அவசியம் இல்லை. அதனால உண்மையான குற்றவாளியை மட்டும் தப்ப விட்டுடாதீங்க" என்று வலுவாக மறுத்தார்.

பதறிட்டாங்க
இருந்தாலும் நெல்லை போலீசாரின் தீவிர முயற்சியால் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனே கொலையாளி என்று முடிவாகி உள்ளது. நேற்று போலீசில் வாக்குமூலம் அளிக்கும்போதுகூட, "சின்ன வயசில் இருந்தே உமா மகேஸ்வரியை கொல்லணும்னு எனக்கு வெறி இருந்தது. கொலைகளை செய்து காரில் சென்று கொண்டிருக்கும்போது எங்க அம்மாவுக்கு போனில் விஷயத்தை சொன்னேன். அவங்க பதறி போய்ட்டாங்க.." என்று கூறியிருந்தார்.

அபாண்டம்
ஆனால் சீனியம்மாளும் அவரது கணவரும் இந்த குற்றச்சாட்டை மறுக்கிறார்கள். "என் பையன் கார்த்திகேயன் மீது அபாண்டமாக பழி சுமத்தப்பட்டுள்ளது. அரசியல் தூண்டுதல் காரணமாகத்தான் அவனை கைது செய்திருக்காங்க. கார்த்திகேயன் நிரபராதி என்பதை சட்டப்படி நிரூபிப்போம்.

மகன் எங்கே?
என்ஜினீயரிங் படித்த அவனுக்கு ஆந்திராவில் வேலை கிடைச்சிருக்கு. மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் மதுரையில் தங்கி இருக்கிறோம். வருகிற 1-ந் தேதி நெல்லைக்கு போன பிறகு அவனை வேலைக்கு அனுப்பலாம்னு இருந்தோம். ஆனா இந்த நேரத்தில் அவனை போலீசார் கைது செய்துட்டாங்க. என் மகன் எங்கேன்னு தெரியலை. போலீசார் எங்க வெச்சிருக்காங்கன்னும் தெரியல. அதனால மகனின் நிலை குறித்து தெரிவிக்ககோரி, ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய போறேன்.

2 பேர்தான்
இது எல்லாத்துக்கும் காரணம் நெல்லையை சேர்ந்த திமுக முக்கிய நிர்வாகிகள் அந்த 2 பேர்தான். அவங்களுடைய தூண்டுதலில்தான் இவ்வளவு பிரச்சனையும் எங்களுக்கு வந்திருக்கிறது. திரும்பவும் சொல்றேன்.. எனக்கும் உமா மகேசுவரிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் நிகழ்ச்சிகளில் மட்டும்தான் நாங்கள் சந்திச்சு பேசியிருக்கோம். சிபிசிஐடி போலீசாவது இதை நேர்மையாக விசாரிக்கணும்" என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications