திருநெல்வேலியின் கூடங்குளம் உள்பட குமரி, நெல்லையில் பல இடங்களில் நில அதிர்வு
திருநெல்வேலி: கூடங்குளம், கூட்டப்புளி, ராதாபுரம், பணகுடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளம், பெருமணல் பகுதியிலும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் இன்று மாலை 4.30 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது,
கூடங்குளம், பெருமணல், காவல்கிணறு, பணகுடி, வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் நில அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் ஒரே நாளில் 18 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா.. முதல்முறையாக 107 பேர் மரணம்!
நில அதிர்வால் கட்டிடங்கள் சற்றுநேரம் அதிர்ந்தன. ஆனாலும், இந்த நில அதிர்வால் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதனிடையே நில அதிர்வால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் அணு உலைக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று கூடங்குளம் அணுமின் நிலையம் விளக்கம் அளித்துள்ளது.
Comments
English summary
Earthquake several places in Kannyakumari and Nellai, including Kudankulam in Tirunelveli
Story first published: Thursday, April 29, 2021, 21:50 [IST]