நெல்லை அதிமுக அடையாளம்.. நாங்குநேரி மாஜி எம்எல்ஏ மாணிக்கராஜ் காலமானார்.. வீட்டிலேயே பிரிந்தது உயிர்
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கராஜ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தற்போது அவருக்கு வயது 71.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மாணிக்கராஜ்... இவர் அதிமுக கட்சியின் மூத்த தலைவர்.. நீண்ட காலமாகவே கட்சிக்காக திறன்பட செயல்பட்டு வருபவர்..

இவரது தீவிரமான செயல்பாட்டுக்காகவே, கடந்த 2001 ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நாங்குநேரி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தந்தார்.. அந்த தேர்தலிலேயே நாங்குநேரி தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கு பிறகு, அதிமுகவில் பல முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி வந்துள்ளார் மாணிக்கராஜ்.. தென் மண்டலத்தில் முக்கிய நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்திருக்கிறார்..
திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுகவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் மாணிக்கராஜ். ஆனால், அதிமுகவில் கடந்த சில வருடங்களாகவே, ஏற்பட்டு வரும் குழப்பங்களால், அவர் அரசியலில் இருந்தும் ஒதுங்கி இருந்தார்.
71 வயதான மாணிக்கராஜ், உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் காலமானார்.. வீட்டில் இருக்கும்போதே அவரது உயிர் பிரிந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்..
அதிமுகவின் மூத்த தலைவரின் மறைவு, நெல்லை அதிமுகவுக்குள் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. மாணிக்கராஜ் மறைவுக்கு அதிமுக தொண்டர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications