நீதிபதி பார்த்த சவுக்கு சங்கர் பேட்டி.. யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மீது தாமாக முன்வந்து வழக்கு
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகியும், யூடியூபருமான பெலிக்ஸ் ஜெரால்டுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. 'சவுக்கு' சங்கரை அவர் பேட்டி எடுத்தபோது, நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் பேசியதே இதற்குக் காரணம். இந்த நேர்காணலைப் பார்த்த நீதிபதி கே. குமரேஷ் பாபு தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கில் பெலிக்ஸ் ஜெரால்டுவையும் சேர்த்து உத்தரவிட்டுள்ளார்.
பிரபல ஜி-ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் கடந்த 2022-ஆம் ஆண்டு, யூடியூபர் 'சவுக்கு' சங்கர் தங்களுக்கு எதிராக அவதூறு பரப்புவதாகக் கூறி ரூ. 1 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து செப்டம்பர் 2022-ல், அந்த நிறுவனத்திற்கு எதிராக ஆதாரமற்ற கருத்துக்களைத் தெரிவிக்க சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

ஜூன் 2023-ல் இந்த உத்தரவில் சில மாற்றங்களைச் செய்த நீதிமன்றம், "சவுக்கு சங்கர் அந்த நிறுவனத்தைப் பற்றி ஏதேனும் கருத்துச் சொல்ல விரும்பினால், முதலில் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி 72 மணி நேரம் காத்திருக்க வேண்டும். அவர்கள் பதில் அளித்தால் அதையும் சேர்த்து வெளியிட வேண்டும்" என்று நிபந்தனையை சவுக்கு சங்கருக்கு விதித்தது.
ஆனால் 2024-ஆம் ஆண்டு பெலிக்ஸ் ஜெரால்டு நடத்திய ஒரு பேட்டியில், சவுக்கு சங்கர் இந்த 72 மணி நேர விதிமுறை குறித்துப் பேசியதாக கூறப்படுகிறது. அத்துடன் நேரலையில் ஒரு கேள்வி கேட்கப்பட்டால், அதற்குப் பதில் சொல்ல தான் 72 மணி நேரம் காத்திருக்க வேண்டுமா? என்று சங்கர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்குத் தொகுப்பாளர் பெலிக்ஸ் ஜெரால்டு, "நீதிமன்ற உத்தரவை அப்படிப் புரிந்துகொள்ள முடியாது" என்பது போலக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இந்த நேர்காணலை பார்த்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே. குமரேஷ் பாபு, நீதிமன்றம் மிகத் தெளிவான உத்தரவைப் பிறப்பித்திருக்கும்போது, அதைச் சிதைக்கும் வகையிலும், அவமதிக்கும் வகையிலும் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகிய இருவரும் பேசியுள்ளதாகக் கருதினார்.
சவுக்கு சங்கர் மீது ஏற்கனவே அவமதிப்பு வழக்கு உள்ள நிலையில், அதற்குத் துணையாக இருந்த தொகுப்பாளர் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் தற்போது வழக்கு பாய்ந்துள்ளது. பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம இது குறித்து விளக்கம் அளிக்க அவருக்கு ஏப்ரல் 24, 2026 வரை கால அவகாசம் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை














Click it and Unblock the Notifications