ஜோக்கராக பணியில் நீடிக்க விரும்பவில்லை.. நெல்லை மணிமுத்தாறு சிறப்பு காவல் படை எஸ்பி அருண் பேட்டி
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு சிறப்பு காவல்படையில் எஸ்பி அந்தஸ்தில் கமாண்டராக பணியாற்றி வந்தவர், அருண். இவர் கடந்த 2012-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக பணியில் சேர்ந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அவருக்கு எஸ்பியாக பதவி உயர்வு கிடைத்தது. ஆனால் அவர் பதவி விலகி உள்ளார். பதவி விலகுவதற்கான காரணம் குறித்து அருண் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.. எனினும் ஜோக்கராக பணியில் நீடிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருண், இவர் குரூப் 1 தேர்வில் வென்று கடந்த 2012ம் ஆண்டு டிஎஸ்பியாக தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்தார். டிஎஸ்பியாக பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வந்த அருண், அடுத்த சில ஆண்டுகளில் கூடுதல் எஸ்பியாக பதவி உயர்வு பெற்றார். ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதல் எஸ்பியாக தொடர்ந்து 4 ஆண்டுகள் பணியாற்றி வந்தார்.

மணிமுத்தாறு சிறப்பு காவல்படை
ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதல் எஸ்பியாக பணியாற்றி வந்த அருணுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் எஸ்பியாக பதவி உயர்வு கிடைத்தது. அவர், திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை பிரிவில் கமாண்டராக எஸ்பி அந்தஸ்தில் பணி நியமனம் செய்யப்பட்டார். அதேநேரம் அவருடன் பணியில் சேர்ந்த சக அதிகரிகளான கார்த்திக், சங்கு ஆகியோருக்கு எஸ்பி அந்தஸ்தில் பதிவு உயர்ந்து கிடைத்தது. அவர்கள் சென்னையில் துணை கமிஷனர்களாக பணி நியமனம் செய்யப்பட்டனர்.
பணியில் இருந்து விலகல்
ஆனால், காவல் அதிகாரி அருண் மணிமுத்தாறு சிறப்பு காவல்படையில் காமாண்டராக பணியில் இருந்து வந்தார். இந்த நிலையில்தான், அவர் கடந்த மார்ச் மாதம் பணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தன்னுடைய உயர் அதிகாரிகளான ஐ.ஜி. விஜயகுமாரி மற்றும் ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமன் ஆகியோரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்திருந்தார்.
கடிதம் அனுப்பிய அருண்
அருண் எழுதியிருந்த கடிதத்தில், 'தனக்கு வேலை பிடிக்கவில்லை. அதனால் விலகுகிறேன்' என்று மட்டும் குறிப்பிட்டிருந்தார். கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமனும் ஐ.ஜி. விஜயகுமாரியும் அருணிடம் சமாதானம் செய்ததாக செய்திகள் அப்போது வெளியாகின.. அவர் கொடுத்த ராஜினாமா கடிதத்தை ஏற்கவில்லை என்றும் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு அந்த கடிதத்தை அனுப்பாமல் தொடர்ந்து சமாதானம் பேசி வந்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் பரவின. இதனிடையே காவல் அதிகாரி அருண் சென்னை கோட்டையில் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமாரை சந்தித்தும் அண்மையில் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.
நேற்று கடிதம் வழங்கல்
அதன்பிறகு, டி.ஜி.பி. சங்கர் ஜிவாலும், அவரை நேரடியாக அழைத்து பேசியதாக கூறப்படுகிறது. ஆனால், ராஜினாமாவை வாபஸ் பெற முடியாது என அருண் உறுதியாக கூறிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல் அதிகாரி அருணின் ராஜினாமா கடிதத்தை ஏற்று தமிழக அரசு கடந்த ஜூன் 15ம் தேதி உத்தரவிட்டது. அரசு உத்தரவு நகல் அருணிடம் நேற்று வழங்கப்பட்டிருக்கிறது.
13 ஆண்டுகள் வேலை
பதவி விலகியது குறித்து காவல் அதிகாரி அருண் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் வெளிப்படையாக எந்த பதிலும் அறிவிக்கவில்லை. எனினும் அவர் கூறும் போது, தமிழ்நாட்டு காவல் துறையில் அதிகாரியாக 13 ஆண்டு காலம் சிறப்பாக பணியாற்றி உள்ளேன்.. இனி எல்லாம் முடிந்துவிட்டது, அரசு உத்தரவும் கிடைத்துவிட்டது, இனி இதில் பேசுவதற்கு எதுவும் இல்லை. என்றார்.
ஜோக்கராக நீடிக்க விரும்பவில்லை
செங்கல்பட்டு மாவட்டம் எனது சொந்த மாவட்டம் என்று கூறிய அருண், ஆசையாகத்தான் காவல் பணியில் சேர்ந்ததாகவும், எவ்வளவோ மனக்கசப்புகள் உள்ளது என்றும் அதை வெளிப்படையாக சொல்ல விரும்பவில்லை என்றும், ஜோக்கராக பணியில் நீடிக்க விரும்பவில்லை என்றும் ஊடகத்திடம் மறுத்துவிட்டார். தனது எதிர்காலம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் இந்த பரந்த உலகத்தில் நிச்சயம் நல்ல எதிர்காலம் இருக்கும் என்று நம்புவதாகவும், தனது மனைவி மற்றும் குடும்பத்தோடு சந்தோஷமாக இருப்பதாகவும் கூறினார்.
-
பாஜகவுக்கு நெல்லை இல்லை! நயினார் நாகேந்திரன் தொகுதி மாறுவதற்கு இப்படி ஒரு காரணமா? பேட்டர்னை பாருங்க! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications