நெல்லையில் கேரளா கழிவுகள்- 18 லாரிகளில் திருப்பி அனுப்பி வைப்பு- இன்றும் 2-வது நாளாக அகற்றம்!
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தின் பல இடங்களில் கொட்டப்பட்ட கேரளா மாநிலத்தின் மருத்துவ கழிவுகள் நேற்று அகற்றப்பட்டு 18 லாரிகளில் திருப்பி எடுத்துச் செல்லப்பட்டன. இந்த மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணி இன்று 2-வது நாளாக நடைபெறுகிறது. கேரளா மருத்துவக் கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்டுவதற்கு உடந்தையாக இருந்த 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி அருகே சுத்தமல்லி, நடுக்கல்லூர் உள்ளிட்ட இடங்களில் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள், தனியார் தோட்டங்களில் கேரளா மாநிலத்தின் மருத்துவ கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வந்தன. இதேபோல பெரும் எண்ணிக்கையிலான கழிவுகள் கடந்த 17-ந் தேதி லாரிகளில் வந்து கொட்டப்பட்டன. இது தொடர்பாக சுத்தமல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கேரளா நிறுவனங்களிடம் பணம் பெற்றுக் கொண்டு தமிழ்நாட்டு இடங்களை காட்டிக் கொடுத்ததாக 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே மருத்துவக் கழிவுகள் விவகாரத்தில் நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கேரளா அதிகாரிகள் நேரில் வந்து தமிழ்நாட்டில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை 3 நாட்களுக்கு அகற்றிச் செல்ல வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டது.
இதனடிப்படையில் கேரளா அதிகாரிகள் நெல்லைக்கு வந்து முகாமிட்டனர். நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனுடன் ஆலோசனை நடத்திய அதிகாரிகள் நேற்று காலை முதல் கழிவுகளை அகற்றத் தொடங்கினர். இதற்காக கேரளாவில் இருந்து 18 லாரிகள் வரவழைக்கப்பட்டிருந்தன. நேற்று மாலை வரை மொத்தம் 18 லாரிகளில் இந்த கழிவுகள் ஏற்றப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டன. தமிழ்நாடு எல்லையான புளியரை சோதனைச் சாவடி வரை இந்த லாரிகளை அதிகாரிகள் வீடியோ பதிவு செய்தனர். இன்று 2-வது நாளாகவும் கேரளா மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட உள்ளன.
இது தொடர்பாக கேரளா அதிகாரிகள் கூறுகையில், கேரளாவில் இருந்து 70 அதிகாரிகள் முகாமிட்டு குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டோம். தமிழ்நாடு அரசு தரப்பில் முழுமையான ஒத்துழைப்பு தரப்பட்டது என்றனர்.
-
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவரை.. ரூ.34 கோடி 'ரத்த பணம்' செலுத்தி மீட்ட கேரள மக்கள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications