Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடுங்கவைத்த நாங்குநேரி! தங்கையுடன் பள்ளி மாணவனை வெட்டிய 6 சிறார்கள் அதிரடி கைது! என்ன நடந்தது? ஷாக்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: நாங்குநேரியில் பள்ளி மாணவனையும், அவனது தங்கையையும் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய வழக்கில் பள்ளி மாணவர்கள் 6 பேரை அதிரடியாக போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் பற்றியும், பின்னணி குறித்த திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெரு பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகா. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் பெயர் சின்னத்துரை. இவருக்கு 17 வயது ஆகிறது.

Nanguneri Incident: 6 school students were arrested by police under SC/ST act and sent to observation home

சின்னத்துரை வள்ளியூரில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரது தங்கை பெயர் சந்திரா செல்வி. இவருக்கு 14 வயது ஆகிறது. இவர் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் தான் சின்னத்துரையை அவருடன் பயிலும் சில மாணவர்கள் சாதி ரீதியாக தொல்லை பாகுபாடு காட்டி துன்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சின்னத்துரை பள்ளி செல்ல மறுத்து வீட்டில் இருந்துள்ளார். இதுபற்றி சின்னத்துரை தனது தாயிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து பள்ளி நிர்வாகம் சின்னத்துரையை துன்புறுத்திய மாணவர்களை எச்சரித்துள்ளது. இந்நிலையில் தான் சின்னத்துரையை பழிவாங்க மாணவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி சின்னதுரையின் வீட்டுக்குள் நுழைந்த மாணவர்கள் அவரை அரிவாளால் உடலில் பல இடங்களில் வெட்டியுள்ளனர். தடுக்க சென்ற அவரது தங்கையையும் அந்த கும்பல் வெட்டி உள்ளது.

இதனால் இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளனர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து சென்றுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதியுள்ளனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தில் பள்ளி மாணவர்கள் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதால் கண்காணிப்பு இல்லத்தில் போலீசார் அடைத்துள்ளனர். கைதானவர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழ்நாட்டையே அலற வைத்துள்ளது. இந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர், இயக்குனர்கள் என பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+