திடீர்னு வருவேன்.. சீட்டில் இல்லாவிட்டால் சஸ்பென்ஷன்தான்.. கலெக்டர் ஷில்பா கடும் வார்னிங்
Recommended Video

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அவர் கிராம நிர்வாகிகளை கடுமையாக எச்சரித்து வெளியிட்டுள்ள ஆடியோ பரபரப்பாக வைரலாகியுள்ளது. மக்களுக்கு உதவக் கூட முயலாவிட்டால் எப்படி என்று அவர் கிராம நிர்வாக அதிகாரிகளை கடுமையாக கண்டித்துள்ளார்.

தமிழகத்தில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கும், விவசாயிகளுக்குமான தலா 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த உதவித்தொகையை பெறுவதற்கு ஏராளமான மக்கள் அந்தந்த கிராமங்களிலுள்ள கிராம நிர்வாக அலுவலகங்களை நாடி சென்ற வண்ணம் உள்ளனர். ஆனால் அதிகாரிகள் அங்கு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்திலுள்ள ஏராளமான பகுதிகளிலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் உள்ளவர்கள் பட்டியலில் ஏராளமானவர்கள் பெயர்கள் விடுபட்டுள்ளதாகவும், தங்களை அந்த பட்டியலில் இணைக்க வேண்டியும் மக்கள் விண்ணப்பங்களை அதிகாரிகளிடம் கொடுக்க சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் பல பகுதிகளிலுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மக்கள் விண்ணப்பங்களை கொடுக்கவோ பெறுவதற்க்கோ சென்றாலும் அந்தந்த பகுதிகளிலுள்ள கிராம நிர்வாக அதிகாரிகள் விண்ணப்பங்களை வாங்க மறுக்கிறார்கள் என பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்த தகவல் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவர் அதிரடி நடவடிக்கையில் குதித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து அனைத்து வட்டாட்சியர்களுக்கும் இது தொடர்பாக அலைபேசியில் காரசாரமாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும், வாட்ஸ் அப்பில் கிராம நிர்வாகி அதிகாரிகளை அவர் கடுமையாக எச்சரிக்கும் ஆடியோவும் வெளியாகி, அதிகாரிகள் மட்டுமல்லாமல் கிராம நிர்வாக பணியாளர் வரை பரவி பரபரப்பை உருவாக்கியுள்ளது. அவரது இந்த அதிரடியான பேச்சு சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications