Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காமராஜரை போல் ஸ்டாலின் நல்லவர்..அவர் கூடவே இருக்க வேண்டும் என்பது விருப்பம்.. நெல்லை கண்ணன் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை : காமராஜரைப் போல் முழு நல்லவர் ஸ்டாலின் எனவும், நல்ல முதலமைச்சரான அவர் நிறைய முயற்சி செய்கிறார், அவரை ஆதரித்து அவர் கூடவே இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என பிரபல பேச்சாளரான நெல்லை கண்ணன் கூறியுள்ளார்.

Recommended Video

    காமராஜரை போல் ஸ்டாலின் நல்லவர்..அவர் கூடவே இருக்க வேண்டும் என்பது விருப்பம்.. நெல்லை கண்ணன் உருக்கம்

    நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து நெல்லையில் பொறுநை நெல்லை ஐந்தாவது புத்தகத்திருவிழா நடத்தி வருகிறது.

    கடந்த 17ம் தேதி தொடங்கிய இந்த புத்தக திருவிழா வரும் 27-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியின் பிரபல பேச்சாளரான நெல்லை கலந்து கொண்டு பேசினார்.

    நெல்லை புத்தக கண்காட்சி

    நெல்லை புத்தக கண்காட்சி

    வழக்கமாக புத்தகக்கண்காட்சி என்றால் லட்சக்கணக்கான புத்தகங்கள் மட்டும் ஸ்டால்களில் விற்பனை செய்யப்படும். ஆனால் நெல்லை கண்காட்சியை மாபெரும் புத்தக திருவிழாவாக நடத்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நடவடிக்கை எடுத்துள்ளார். புத்தக திருவிழாவில் எழுத்தாளர்கள் தமிழ் அறிஞர்கள் கருத்தரங்கம் தினமும் நடைபெற்று வருகிறது.

    நெல்லை கண்ணன் உருக்கம்

    நெல்லை கண்ணன் உருக்கம்

    இந்நிலையில் இன்று நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய நெல்லை கண்ணன், " எல்லா நல்லவர்களையும் பார்த்தாச்சு காமராஜரைப் போல் முழு நல்லவனாக உருவாக்கிக் கொண்டிருக்கிற ஸ்டாலின் அவர் கூடவே இருந்து அவரை ஆதரித்து அவர் கூடவே இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.

     நல்ல முதலமைச்சர்

    நல்ல முதலமைச்சர்

    நல்ல முதலமைச்சர் நிறைய முயற்சி செய்கிறார் அவரிடம் ஒரே ஒரு வேண்டுகோள் தமிழகத்தின் குழந்தைகள் ஆறுவயதிற்குள் பள்ளிக்கு அனுப்பக்கூடாது என்ற ஒரு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் குழந்தைகளை பாதுகாத்து தாருங்கள் ; குழந்தைகள் நமது எதிர்கால செல்வங்கள் அவர்களை இந்தப் பள்ளி கூடங்கள் முளையிலேயே கருகிவிடும்

    படைப்பாளிகளின் சங்கமம்

    படைப்பாளிகளின் சங்கமம்


    அதுபோல புத்தக கண்காட்சி என்ற வார்த்தையை முதலில் எதிர்த்தவன் நான் புத்தகம் என்பதே வடமொழி இதனை படைப்பாளிகளின் சங்கமம் என அறிவிக்க வேண்டும் என்று முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன். புத்தகத்திருவிழாவில் புத்தகத்தை வாங்க வேண்டும் அதனைப் படிக்க வேண்டும் எது தேவையோ அதை படிக்க வேண்டும்" என நெல்லை கண்ணன் பேசினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+