Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தை உலுக்கிய நெல்லை கல்குவாரி விபத்து! நீண்ட போராட்டத்திற்கு பிறகு 5வது நபர் சடலமாக மீட்பு!

Subscribe to Oneindia Tamil

நெல்லை : நெல்லை பொன்னாக்குடி அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்த விபத்தில் சிக்கிய 5வது நபரை தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் சுமார் 4 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்த மீட்பு பணிக்கு பிறகு இடிபாடுகளில் இருந்து சடலமாக மீட்டனர்.

நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே அடை மிதிப்பான் குளத்தில் கல் குவாரியில் நேற்று முன்தினம் இரவு 400 அடி ஆழத்தில் கற்களை ஏற்றிக்கொண்டிருந்தபோது ராட்சத பாறை உருண்டு விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த 6 தொழிலாளர்கள் பாறைகளின் இடிபாடுகளில் சிக்கினர்.

மேலும் அங்கு நின்ற லாரி மற்றும் பொக்லைன் எந்திரங்களும் இடிபாடுகளில் சிக்கியது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று கயிறு மூலம் குவாரிக்குள் இயங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கல்குவாரி விபத்து

கல்குவாரி விபத்து


அப்போது இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்த விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன் , நாட்டார்குளத்தை சேர்ந்த விஜய் ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் சுமார் 17 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இளையநயினார் குளத்தை சேர்ந்த செல்வம் என்பவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பேரிடர் மீட்புக்குழு

பேரிடர் மீட்புக்குழு

இதற்கிடையே பாறை சரிவில் சிக்கிய காக்கைகுளத்தை சேர்ந்த செல்வகுமார் , தச்சநல்லூர் ஊருடையான்குளத்தை சேர்ந்த ராஜேந்திரன், ஆயன்குளத்தை சேர்ந்த மற்றொரு முருகன் ஆகிய மேலும் 3 பேர் கதி என்ன? என்று தெரியாத நிலையில், சுமார் 400 அடி ஆழத்தில் சிக்கி இருப்பதால் அவர்களை மீட்க அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 30 பேர் வரவழைக்கப்பட்டனர். நேற்று நள்ளிரவு சம்பவ இடத்திற்கு வந்தடைந்த அந்த குழு குவாரியை முழுமையாக ஆய்வு செய்தது.

மீட்பு பணியில் சிக்கல்

மீட்பு பணியில் சிக்கல்

இதற்கிடையே பாறை சரிவில் சிக்கிய காக்கைகுளத்தை சேர்ந்த செல்வகுமார் , தச்சநல்லூர் ஊருடையான்குளத்தை சேர்ந்த ராஜேந்திரன், ஆயன்குளத்தை சேர்ந்த முருகன் ஆகிய 3 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதில் நேற்று 4வது நபர் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் நான்காவதாக சடலமாக மீட்கப்பட்டவர் பெயர் முருகன் என்பதும், நாங்குநேரி அருகே உள்ள ஆயர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறினர்.

5வது நபர் மீட்பு

5வது நபர் மீட்பு

இந்நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கல்குவாரி விபத்தில் உயிரிழந்த மேலும் ஒரு நபரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 4ஆம் நாளாக நடைபெற்று வரும் மீட்பு பணியின்போது கல்குவியலுக்குள் சிக்கியிருந்த 5வது நபரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. கல்குவாரி விபத்தில் சிக்கிய 6 பேரில் இதுவரை 3 பேர் சடலமாகவும், 2 பேர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒருவரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+