நெல்லை சீமையை நடுநடுங்க வைத்த ராக்கெட் ராஜா மீது அதிரடியாக பாய்ந்தது குண்டர் சட்டம்!
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்ட ரவுடியும் , பனங்காட்டுப் படை கட்சியின் தலைவருமான ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நெல்லை மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் ஆனைகுடியை சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. இவரது இயற்பெயர் ஆறுமுகப்பாண்டியன் அல்லது பாலவிவேகானந்தன்.

தென் மாவட்டங்களை கலக்கி வந்த கராத்தே செல்வினின் வலதுகரமாக செயல்பட்டவர் ராக்கெட் ராஜா. கராத்தே செல்வினுக்குப் பின்னர் வெங்கடேச பண்ணையார் அணியில் இணைந்தார் ராக்கெட் ராஜா. சென்னையில் வெங்கடேச பண்ணையார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதன்பின்னரும் ஹரிநாடார் உள்ளிட்டோருடன் இணைந்து பனங்காட்டுப் படை கட்சியை தொடங்கி நடத்தி வந்தார் ராக்கெட் ராஜா. சசிகலா புஷ்பா விவகாரத்தில் அவருக்கு பாதுகாப்பு படையாக இருந்தவர்கள் என ஹரிநாடார், ராக்கெட் ராஜா பெயர்கள் அடிபட்டன.
ராக்கெட் ராஜா மீது 5 கொலை வழக்குகள் மற்றும் பல்வேறு கொலை முயற்சிகள் இருந்தன. இதில் பெரும்பாலானவற்றில் ராக்கெட் ராஜா விடுதலையாகிவிட்டார். ஆனால் பேராசிரியர் செந்தில்குமார் கொலை வழக்குதான் ராக்கெட் ராஜாவை இடைவிடாமல் துரத்தியது. அண்மையில் நாங்குநேரில் சாமிதுரை படுகொலை வழக்கிலும் ராக்கெட் இதனால் ஒவ்வொரு மாநிலமாக தப்பி சென்று கொண்டே இருந்தார் ராக்கெட் ராஜா. அங்கிருந்த படியே தமது நெல்லை நெட்வொர்க்கை அசால்ட்டாக இயக்கி வந்தார்.
வெளிமாநிலங்களில் இருந்து திருவனந்தபுரம் வழியாக ஆனைக்குடிக்கு ரகசியமாக வந்து போனார் ராக்கெட் ராஜா. இந்த தகவலை அறிந்த போலீசார், ராக்கெட் ராஜாவை பிடிக்க திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் பொறி வைத்து காத்திருந்தனர். போலீசாரின் ஸ்கெட்ச் ஒர்க் அவுட் ஆகவே, திருவனந்தபுரத்தில் வசமாக சிக்கிக் கொண்டார் ராக்கெட் ராஜா.
ராக்கெட் ராஜாவை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். தற்போது ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications