நெல்லை சீமையை நடுநடுங்க வைத்த ராக்கெட் ராஜா மீது அதிரடியாக பாய்ந்தது குண்டர் சட்டம்!
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்ட ரவுடியும் , பனங்காட்டுப் படை கட்சியின் தலைவருமான ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நெல்லை மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் ஆனைகுடியை சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. இவரது இயற்பெயர் ஆறுமுகப்பாண்டியன் அல்லது பாலவிவேகானந்தன்.

தென் மாவட்டங்களை கலக்கி வந்த கராத்தே செல்வினின் வலதுகரமாக செயல்பட்டவர் ராக்கெட் ராஜா. கராத்தே செல்வினுக்குப் பின்னர் வெங்கடேச பண்ணையார் அணியில் இணைந்தார் ராக்கெட் ராஜா. சென்னையில் வெங்கடேச பண்ணையார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதன்பின்னரும் ஹரிநாடார் உள்ளிட்டோருடன் இணைந்து பனங்காட்டுப் படை கட்சியை தொடங்கி நடத்தி வந்தார் ராக்கெட் ராஜா. சசிகலா புஷ்பா விவகாரத்தில் அவருக்கு பாதுகாப்பு படையாக இருந்தவர்கள் என ஹரிநாடார், ராக்கெட் ராஜா பெயர்கள் அடிபட்டன.
ராக்கெட் ராஜா மீது 5 கொலை வழக்குகள் மற்றும் பல்வேறு கொலை முயற்சிகள் இருந்தன. இதில் பெரும்பாலானவற்றில் ராக்கெட் ராஜா விடுதலையாகிவிட்டார். ஆனால் பேராசிரியர் செந்தில்குமார் கொலை வழக்குதான் ராக்கெட் ராஜாவை இடைவிடாமல் துரத்தியது. அண்மையில் நாங்குநேரில் சாமிதுரை படுகொலை வழக்கிலும் ராக்கெட் இதனால் ஒவ்வொரு மாநிலமாக தப்பி சென்று கொண்டே இருந்தார் ராக்கெட் ராஜா. அங்கிருந்த படியே தமது நெல்லை நெட்வொர்க்கை அசால்ட்டாக இயக்கி வந்தார்.
வெளிமாநிலங்களில் இருந்து திருவனந்தபுரம் வழியாக ஆனைக்குடிக்கு ரகசியமாக வந்து போனார் ராக்கெட் ராஜா. இந்த தகவலை அறிந்த போலீசார், ராக்கெட் ராஜாவை பிடிக்க திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் பொறி வைத்து காத்திருந்தனர். போலீசாரின் ஸ்கெட்ச் ஒர்க் அவுட் ஆகவே, திருவனந்தபுரத்தில் வசமாக சிக்கிக் கொண்டார் ராக்கெட் ராஜா.
ராக்கெட் ராஜாவை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். தற்போது ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications