‛‛வெள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்’’.. பயணிகளை நெருங்கிய ஆபத்து.. வள்ளியூரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவம்
திருநெல்வேலி: நெல்லை வள்ளியூரில் இன்று பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அரசு பேருந்து பயணிகளுடன் சிக்கியிருக்கிறது. தீயணைப்பு வீரர்கள் பயணிகளை பத்திரமாக மீட்டிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு தமிழகத்தை கோடை வெயில் வாட்டி எடுத்த நிலையில், இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் ஓரளவு இருந்தாலும், மழை ஒட்டுமொத்த கிளைமேட்டையே மாற்றியிருக்கிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லை வள்ளியூரில் ரயில்வே தரைப்பாளத்தில் அரசு பேருந்து ஒன்று சிக்கியது.

அதாவது இன்று மதியம் 3 மணி தொடங்கி சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இப்படி இருக்கையில், நாகர்கோவிலிலிருந்து திருச்செந்தூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று வள்ளியூர் ரயில்வே தரை பாலத்தை கடக்க முயன்றது.
ஆனால் அங்கு தேங்கி இருந்த மழை நீரில் பேருந்து உடனே பழுதடைந்து நின்றுவிட்டது. இதனால் பேருந்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் என 65க்கும் மேற்பட்டோர் வெளியேற முடியாமல் தவித்தனர். இது குறித்து உடனடியாக வள்ளியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. எனவே உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் பேருந்தில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்டனர்.
மீட்கப்பட்டவர்கள் மாற்று பேருந்து மூலம் திருச்செந்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பேருந்து மழை நீரில் சிக்கியதால் அப்பகுதியில் லேசான சலசலப்பு நிலவியது.
முன்னதாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் எனவே, மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தியிருந்தது.

அதாவது, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை வரையில் பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
எனவே தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உள்ளிட்ட 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் & பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் அவசர கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி கன மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.
மிக கனமழை எனில் 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பொழியும் எனில் அந்த பகுதிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படும். தற்போது இந்த 26 மாவட்டங்களில் 10 செ.மீக்கும் அதிகமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications