Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்களை தொட்டிருக்க கூடாது சிங்காரம்.. தவெகவுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் மாஸ் முடிவு.. விஜய் ஷாக்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தவெக தலைவர் விஜய் முதல் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் வரை அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள். திமுக மிரட்டியதால் ரஜினி அரசியலில் பின் வாங்கி விட்டார் என ஆதவ் அர்ஜுனா கூறியிருந்தார். (Rajinikanth)

இதற்கு திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. ரஜினியும் அதை திட்டவட்டமாக மறுத்து விளக்கம் அளித்திருந்தார். இதையடுத்து ஆதவ் அர்ஜுனா ரஜினிகாந்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனாலும் இந்த விவகாரத்தை தவெகவுக்கு எதிராக மிகப்பெரிய பிரச்சாரமாக முன்னெடுத்து நெருக்கடி கொடுக்க ரஜினி ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Rajinikanth

நேரில் மன்னிப்பு கேட்கணும்

திருநெல்வேலி ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட துணைச் செயலாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் கடந்தமுறை நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டேன். இந்தமுறை திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவேன். நான் எதற்காக களமிறங்குகிறேன் என்று உங்களுக்கு தெரியும். தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக தான் களமிறங்குகிறேன்.

அவர்கள் எங்களை சீண்டக் கூடாது என நினைத்தோம். எங்களை சீண்டிவிட்டனர். அதனால் வெற்றிக் கழகம் எங்கெல்லாம் போட்டியிடுகிறதோ, அங்கெல்லாம் ரஜினி ரசிகர்கள் களமிறங்குவார்கள். எங்கள் தலைவரிடம் மன்னிப்பு கேட்பதாக நேற்று அறிவித்துவிட்டார். அதை நாங்கள் ஏற்க மாட்டோம். இது சாத்தியப்படாது. எங்கோ மேடையில் பேசுவதை எல்லாம் ஏற்க முடியாது.

234 தொகுதிகளில் மாஸ் திட்டம்

அவர்கள் எங்கள் தலைவரிடம் நேரடியாக சென்று மன்னிப்புக் கேட்க வேண்டும். இது எங்கள் கோரிக்கை. அப்போதுதான் நாங்கள் எங்கள் முடிவில் இருந்து வாபஸ் பெறுவோம். தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். 234 தொகுதிகளிலும் உங்களை எதிர்த்து எங்கள் ஆட்களை நிறுத்துவோம். விஜய் எங்கு நிற்கிறாரோ அந்த தொகுதியிலும் நான் வேட்புமனுத்தாக்கல் செய்வேன்.

எங்கள் முடிவுக்கு ரஜினிகாந்த் பக்க பலமாக இருப்பார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அவரால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. நாங்கள் ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டுள்ளோம். ரஜினி எங்களுக்கு அனுமதி வழங்குவார். எங்களிடம் மோதிவிட்டார்கள் என்பதால் நிச்சயம் அனுமதி வழங்குவார். நான் இப்போது வேட்பு மனு வாங்கிவிட்டேன். மார்ச் 30 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்வேன்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+